Wednesday, June 29, 2011

ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் சொல்லும் அனுபவங்கள்

இப்போதைக்கு ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதைதான் கொண்டாடுது இந்தியா. இந்த சமாச்சாரம் தலைப்பு செய்தியாக கூட வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் கூட இந்தியா உலகக்கோப்பையை வென்றது போன்ற ஃபீலிங்கில் செய்திகளைத் தட்டிவிட்டார்கள்.


நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த ’பிஃப்டி கே.ஜி. தாஜ்மஹாலின்’ கர்ப்பம் பத்தி பேச்சு வந்தது.


‘என்ன தலைவா.. இந்தம்மா நாற்பது வயசுக்கு மேல கர்ப்பமாகி இருக்காங்க. நல்ல விஷயம். இப்போவாவது இந்த முடிவை எடுத்தாங்களே.’ என்றவர் அப்படியே அடுத்த பாயிண்ட்டுக்கு தாவினார். ‘அது சரி இந்தம்மா கர்ப்பமானதுக்கு, ஏதோ இவங்களெல்லாம் தான் கஷ்டப்பட்டு உதவி பண்ணுன மாதிரி சொல்லிகிறாங்க. மாமனார் அமிதாப் சந்தோஷத்துல கமுக்கமாக புன்னைக்கிறார். மாப்பிள்ளை அபிஷேக் ஒண்ணுமே சொல்லல. ஆனால் நம்ம ஆட்கள் சும்மா இருக்காம, ஏதோ ஒலிம்பிக்குல இந்தியா முதல் இடத்தைப் பிடிச்ச ஒரு நியூஸ் ப்ரோக்ராம் பண்றாங்க. மைக்கை தூக்கிட்டு பாலிவுட்டுல இருக்கிற ஒவ்வொரு நடிகர்களிடம் கருத்து கேட்கிறாங்க. அவங்களும் ‘கூல்..’, ‘ஐ யம் வெர்ரி ஹேப்பி’ (ஏதோ இவர்தான் அதுக்கு காரணகர்த்தா மாதிரி), ‘இந்தியாவே கொண்டாடுது’ன்னு கூச்சப்படாம கமெண்ட் அடிக்கிறாங்கன்னு சொல்லி சிரித்தார். அதில் அவ்வளவும் உண்மை என்றே எனக்கு தோன்றியது.


உண்மையிலே இதெல்லாம் ஒரு பெரிய சமாச்சாரமே இல்ல. இங்கே ஒரு முன்னணி ஹீரோயினுக்கு கல்யாணம் என்றாலோ, அல்லது ஒரு நடிகைக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்றாலோ, ஹீரோயின் விவாகரத்து விவகாரமாக இருந்தாலோ போதும், அதில் சம்பந்தபட்ட நட்சத்திரத்தை விட ஒரு சினிமா நிருபருக்குதான் டென்ஷன் அதிகமிருக்கும். இவருக்குதான் கல்யாணமாவது போல பரபரப்பாக இருப்பார். இவருக்கு குழந்தைப் பிறக்க போகிறது என்பது போன்ற டென்ஷனில் ஆஸ்பத்திரிக்கு வெளியே மொபைல் ஃபோனை காதில் வைத்தபடி, லைவ் கமெண்ட்ரி கொடுத்தபடி, அங்கும் இங்கும் நடந்து நடந்து ஒரு மினி பாத யாத்திரையையே முடித்திருப்பார். சம்பந்தபட்ட நட்சத்திரம் கூட விவாகரத்து ஹியரிங்குக்கு கேஷூவலாக வந்து போனபடி இருப்பார். ஆனால் நிருபருக்கு ‘எப்போடா இந்த கோர்ட் விவாகரத்து கொடுக்கும். மனசுக்கே நிம்மதி இல்லாம போச்சே’ என்று அவருக்கு நேர்ந்த பிரச்னையை போல ஃபீல் பண்ணி புலம்பியபடி இடத்தை காலி பண்ணுவார். ஏன்னா அடுத்த ஹியரிங்குக்கும் அவர்தானே அலையணும்.


மொத்தத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு, நட்சத்திரங்கள் சம்பந்தபட்ட சந்தோஷமான விஷயமானாலும் சரி, அவர்கள் சம்பந்தபட்ட ஏடாக்கூட விவகாரமானாலும் சரி எல்லாமுமே ஒரு வகையில் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை’ டயலாக் ஸ்டைல் பிரச்னைதான்.

Tuesday, June 28, 2011

தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க


ஆட்சி மாறியாச்சு. இன்னுமா காட்சி மாறலன்னு எந்த நேரத்துல தோணுச்சோ. நாம் நினைச்சது கூட இவங்களுக்கு கேட்டிருக்குமோ, என்னமோ சொல்லி வைச்ச மாதிரி, இப்ப ‘கச்சத்தீவை மீட்கணும்’னு நம்ம ஆளுங்க கிளம்பிட்டாங்க.

இப்படிதான் இதுக்கு முன்னாடி ‘எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக செத்து மடிகிறார்கள். ஏய் ராஜ பக்‌ஷே தைரியமிருந்தால் எங்கள் உறவுகள் மீது கை வைத்துப் பார்’ என்று ஜோராக, கோரஸாக கோஷமிட்டார்கள் சிலர். ’என்கிட்டேயே சவாலா, வந்து பாருடா..’என்று இன்னும் வேகமாக தமிழ் மக்களை கொன்று குவித்தது ராஜ பக்‌ஷேவின் ஈழ ராணுவம்.

குறைந்த பட்சம் எதிரியை உசுப்பேத்தாமல் இருந்திருந்தால் கூட, அவன் வேறு வேலையைப் பார்த்திருப்பான். பாதுகாப்பின்றி தவிக்கும் நம் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச பிரச்னையாவது தீர்ந்திருக்கும். சிலர் ராமேஸ்வரம் வரை போய், ராஜ பக்‌ஷேக்கு எதிராக கோஷம் போட்டார்கள், குரல் கொடுத்தார்கள், ஆவேசப்பட்டார்கள், உணர்ச்சிப் பிழம்பாய் முழங்கினார்கள். அதேவேகத்தில் சென்னைக்கு வண்டியைக் கிளப்பிவிட்டார்கள். அதோடு முடிந்தது தொப்புள் கொடி உறவுகளின் மீதான அக்கறை.

உங்களை யாராவது கேவலமாகவோ அல்லது சீண்டிப்பார்க்கிற மாதிரியோ திட்டினால், உங்களுக்கு ரொம்ப குஷியாக இருக்குமா, அந்த அர்ச்சனைகளைக் கேட்டு நீங்கள் அதை ரசித்து சிரிப்பீர்களா. இதே  சைக்காலஜிதானே ராஜ பக்‌ஷேவுக்கும் இருக்கும். அப்புறம் ஏன் நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டில், உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு, எதிரியை உசுப்பேத்தி விடுகிறீர்கள்?

உண்மையிலேயே தமிழ் உறவுகள் மீது அக்கறை இருந்தால், கிளம்புங்கள் இலங்கைக்கு. தோணிகளில் நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்தால் இந்த உலகமே ஈழப்பிரச்னையை திரும்பிப் பார்க்குமே. உலக முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ் உணர்வு சர்வதேச அரங்கை சுனாமியாக தாக்குமே. ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உங்கள் போராட்டத்தை உற்று நோக்குமே. ஒரு புது சகாப்தமே உருவாகுமே. ஆனால அந்த தைரியம் ஏன் இல்லாமல் போச்சு நமக்கு? உண்மையிலேயே உணர்வு இருந்தால் இதுவும் சாத்தியமே. மறத்தமிழனுக்கு இது எம்மாத்திரம்தானே? (ஆனால் நிச்சயம் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது.)

கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று புதிய முதலமைச்சரை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, உண்மையான உணர்வோடு இலங்கைக்கே சென்று போராடுங்கள். அது முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், நல்ல முடிவுகளை எடுக்குமாறு அரசுக்கு நெருக்கடி கொடுங்கள். அதுபோதும். கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொருத்தனும் தனது கவலையை மறக்க திரையரங்குகளுக்கு வருகிறான். அவனை திருப்திப்படுத்துகிற மாதிரி நல்ல திரைப்படங்களைக் கொடுங்கள். புதிய, நல்ல கதைகளை உருவாக்குங்கள். நடியுங்கள். இதைவிட வேறு என்ன நல்ல காரியங்களைச் செய்ய  முடியும்? இதை ஒழுங்காக செய்தாலே திருட்டு டிவிடி பிரச்னை இல்லாமலே போய்விட வாய்ப்பிருக்கிறது. திரையரங்குக்கு சென்று பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்ற உணர்வை வரவழைக்கும் படங்களையும் கொடுங்கள். முதலில் கலையுலகை வாழ வையுங்கள்.

மக்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால்  அதை செயல் படுத்த உங்களால் ஒரு வேகம் கொடுக்க முடியும். அதற்கு என்ன வழிகள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு புதிது புதிதாக குரல் கொடுக்கும் கலாச்சாரம் இனியாவது ஒழிய வேண்டும். வீண் பில்டப்கள், பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிஸ இமேஜ்ஜூக்காக குரல் கொடுக்கும் விஷயங்கள் இல்லாத உண்மையான போராட்டம் வேண்டும். அதுவும் யாரையும் துன்புறுத்தாத போராட்டம் வேண்டும்.

மக்கள் கலைத் துறையினரிடம் எதிர்ப்பார்ப்பது  நல்ல படைப்புகளை. அரசிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல ஆளுமையை.


Saturday, June 25, 2011

சினிமா நட்சத்திரங்களுடன், ‘இனிமா’ போன் கால் அனுபவங்கள்

சினிமா நட்சத்திரங்கள் மீது பலருக்கு ஒரு ’அபார ஈர்ப்பு ’இருக்கும். ஆனால் சினிமா நிருபர்களுக்கோ அது ’அகோர கடுப்பாக’ இருக்கும்.

சமாச்சாரம் இதுதான்.

(பொதுவாக ’ஒரு சில’ அல்லது ’ப’ல நட்சத்திரங்களை மட்டுமே இது குறிக்கிறது, எல்லா நட்சத்திரங்களையும் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.)

நம்ம கோலிவுட் நட்சத்திரங்களில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு அவசரத்திற்கு நாம் போன் செய்தால், மறு முனையில் தனது வீட்டிலோ, ஜிம்மிலோ அல்லது ஷூட்டிங் ப்ரேக்கிலோ அல்லது எங்கே இருந்தாலும் கூட, நமது போன் கால்லை எடுக்க மாட்டார்கள். (நம்மாட்களுக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்பதான் அதிகம் போல. கையிடைப் பேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.). நாமும் விடாக்கண்டணாக எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும், எதிர்முனையில் ‘காந்திய’ பாலிஸி படி ஒரு இம்மியளவு கூட அவர்களிடம் எதிர்வினை இருக்கவே இருக்காது.

. ’இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்பா’ என்ற வடிவேலுவின் காமெடியை போல எவ்வளவு போன் கால் பண்ணினாலும், எஸ்.எம்.எஸ். பண்ணினாலும் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும் அவர்களது அணுகுமுறை.


சில சமயங்களில் நாம் ஏதாவது விஷயத்தைக் கேட்டு போன் செய்தால்,
 ’ஜி இப்போ எடிட்டிங்ல இருக்கேன் அல்லது டிஸ்கஷன்ல் இருக்கேன். சாய்ந்தரம் கூப்பிடட்டுமா’ என்றபடி போன் கால்லை கட் பண்ணுவார்கள். மாலை ஆனதும், அவரது ஆட்களிடம் இருந்து போன் கால் வரும். ‘ சார்..அந்த மேட்டரை இப்போ வேண்டாம்னு சொல்றார். பின்னாடி பண்ணிக்கலாமே’ என்று சொல்லும் அந்தக் குரல். காரணம் அந்த நட்சத்திரத்துக்கு ‘கஜினி’ சூர்யா கதாபாத்திரத்தைப் போல ‘ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ்’ வந்திருக்கும். நம்முடைய நம்பரையோ, அல்லது நம்மை அவருக்கு ஞாபகம் இருக்காது. ஞாபகம் இருந்தால் அவரே போன் பண்ணியிருப்பாரே. அவர் நல்லவர் தான். பாவம் இப்படியொரு  மெம்மரி லாஸ் இருந்தால் என்னதான் பண்ண முடியும்?


ஆனால் ஒரேயொரு கிசுகிசுவையோ, அல்லது உண்மையில் நடந்த சமாச்சாரத்தையோ இரண்டே வரியில் எழுதி, அது பத்திரிக்கையில் வெளி வந்ததால் போதும்.

அதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அதே நட்சத்திரம்,  ஆழ்கடல் போன்று அமைதியாக இருந்த அதே நட்சத்திரம், ‘சுனாமி’ போல பொங்கியெழுவார். இரவு ஒரு மணியானாலும் சரி, அல்லது அதிகாலை நான்கு மணியானாலும் சரி (டைமிங்கை கவனிக்கவும். அதற்கு முன்பு ’என்ன ’ நடந்திருக்குமோ யாருக்குத் தெரியும்) நம் செல்போனுக்கு ‘டர்ர்ர்ர்ர்..’ரென்று தொடர்புக் கொள்வார். நாம் அசதியில் தூங்கிக் கொண்டிருப்போம். ஆனாலும் இப்போது அவர் ‘விடாக்கண்டன்’ கதாபாத்திரமாக மாறி தொடர்ந்து போன் பண்ணுவார்.

போனை எடுத்ததும், ‘என்ன ஜி..இப்படி வந்திருக்கு...அப்படி வந்திருக்கு. நான் எதுவும் பேசவே இல்லையே. உங்களுக்கு என்ன தெரியும்..’ என்று கதகளி, கதக், குச்சுப்புடி, சல்ஸான்னு எல்லா நடனங்களையும் கலந்து கட்டி, நம்மூர் டான்ஸ் மாஸ்டர்களுக்கே தெரியாத ஒரு ‘மார்க்கமான’ ஆட்டம் போட்டுவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போன் காலை கட் பண்ணிவிடுவார்.

ஒரு நல்ல விஷயம் எழுதினாலோ, அல்லது அவர்களது பேட்டியோ அல்லது அவர்கள் சம்பந்தமான ஒரு கட்டுரையோ வெளிவந்தால் அதற்கு மனதார வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் நட்சத்திரங்கள் பலரிடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதுதான் யதார்த்தம்.

சினிமாவில் இப்படி பல ’இனிமா’ அதிகம். இனிமா அனுபவங்கள் தொடரும்...


Thursday, June 23, 2011

ஸ்நேகா நேர்க்காணல்



2000-ல் எந்தவிதமான பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். இந்த பத்து வருடங்களில் நல்லப் பெயரை வாங்கியிருக்கிறேன். மலேஷியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என நான் எங்கு சென்றாலும் எனக்கென ஒரு மரியாதை இருக்கிறது. credibility என்பது என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன், நம்பர் டு இடமா என கேட்டால் அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமான இடத்தில்தான் இருக்கிறேன். இன்றைக்கும் ஐந்துப் படங்கள் பண்ணுகிறேன். இவ்வளவிற்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. ஹோம்லியான நடிகைதான்.”

அங்கீகாரம்?

தமிழ்ப் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. தமிழ் ஹீரோயின் என்றால் அவர்களுக்கு தமிழ்ப் பேசத் தெரியக் கூடாது. ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும்.”


”சிலர் நீங்கள் பெரியப் படங்கள் எப்போது பண்ண போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எது பெரிய படம் என்று புரியாமல் அவர்களிடமே கேட்டால், பெரிய ஹீரோக்கள் படங்கள் என்கிறார்கள். சில நேரங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட ஓடுவது இல்லை. சிறிய படங்கள் என்று சொல்லப் படுகிற படங்கள் பெரிய அளவில் ஓடுகின்றன. அப்படியென்றால் எதை நீங்கள் பெரிய படங்கள் என்று சொல்வீர்கள்? நான் நடிக்கிற படங்கள் பெரிய படங்களா என்று கேட்டால், எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடிக்கிறப் படங்கள் நல்லப் படங்கள். என்னுடைய கதாபாத்திரங்களைப் பார்த்தால் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்கிற மாதிரி என்னுடைய படங்கள் இருக்கும்.”

 ராசியில்லா நடிகையா?

”ஆரம்பத்தில் என்னுடைய சில படங்கள் ஓடாத போது ஸ்நேகா ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள். பிறகு என்னுடைய ஹிட்ஸை பார்த்து, பெரிய பெரிய ஹீரோக்களுடன் படம் நடித்தப் போது அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஸ்நேகா நடிக்கிறப் படங்கள் பெரியப் படங்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் ஸ்நேகா படம் என்றால் எல்லா மக்களும் சென்றுப் பார்க்கக்கூடிய அளவிற்கு நல்லப் படமாக இருக்கும்.”

சர்ச்சை

நான் நடிக்க வந்ததிலிருந்தே நான் உண்டு என் வேலை உண்டு என ஓடிக்கொண்டே இருப்பேன். எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிடுவேன். காரணம் என்னுடைய அன்பான குடும்பம். அப்பா, அம்மா, பெரிய அண்ணன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம், அக்கா குடும்பம் என எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். இதனால் அவர்களுடைய சந்தோஷங்களைப் பார்க்கும் போது கிசுகிசுக்களைப் பெரிதாக நான் கண்டுக்கொள்ளவே இல்லை. 

ஆனால் சமீபகாலமாக என்னைக் காயப்படுத்தவேண்டுமென்றே கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள். கொஞ்சம் ஓவராகவே எழுதியும் இருக்கிறார்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. ஸ்நேகா நடிக்க வந்துவிட்டாள் என்பதற்க்காக என்னைப் பத்தி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? ஒரு மனிதாபிமானம், நாகரிகம் வேண்டாமா? இதுவரை என்னப் பற்றி கிசுகிசுக்கள் வந்தப்போது நான் கண்டுக்கொண்டதே இல்லை. ஆனால் இனி நான் விடமாட்டேன். என்னைப் பற்றி தவறாக எழுதினால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். 

ஸ்நேகா என்றால் ரொம்ப அமைதியான பெண், நம்ம வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறாளே என்று சொல்வார்கள். அதனால்தான் இப்படி திரும்ப திரும்ப என்னைப் பற்றி அவதூறான கிசுகிசுக்களைக் கிளப்பி விடுகிறார்கள் போல. இனியும் நான் அமைதியான பெண்ணாக இருக்க மாட்டேன்.”

  நடிகைகள் என்றாலே விபச்சாரிகளா?

”நடிகைகள் விபச்சாரிகள் இல்லை. நிச்சயம் நடிகைகள் யாரும் அப்படி இல்லை. ஒரு டாக்டர் என்றால் அவருடைய வேலையைப் பார்க்கிறார். ஒரு டீச்சர் எப்படி அவர்களுடைய வேலையைப் பார்க்கிறாரோ அதைப் போலதான் ஒரு  நடிகை தன்னுடைய வேலையைப் பார்க்கிறார்.

 கேமராவிற்கு முன்னால் நின்று நடிப்பதால் அவர்கள் தப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. அதனால் நடிகைகளை மட்டும் அப்படி தவறாகப் பார்க்காதீர்கள். மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்.

சுதந்திரம் இல்லையே..

 ஃப்ரெண்ட்ஸ்களுடன் பேசினால் அதையும் தவறாக நினைத்தால் எப்படி? நான் நடிக்கும் படங்களைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள். அதில் குறை இருந்தால் சொல்லுங்கள்.மேக்கப் சரியில்லையா? காஸ்ட்யூம் நன்றாக இல்லையா? நடிப்பு பிடிக்கவில்லையாஇதையெல்லாம் ஓபனாக சொல்லுங்கள். ஆனால் ஒரு சாதாரண பெண்ணிற்குக் கிடைக்கும் சுதந்திரமும், இடமும் ஒரு நடிகைக்குக் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணை யாராவது ராக்கிங் பண்ணினால், அதுபற்றி அந்தப்பெண் போலீஸில் புகார் கொடுத்தால் அதில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கோ மற்றொரு நடிகைக்கோ பிரச்னை என்று புகார் கொடுத்தால், அதுவே ஒரு பெரியா பிரச்னை ஆகிவிடுகிறது.சாதாரண பெண்ணிற்கான சுதந்திரமோ, நியாயமோ நடிகைகளுக்கு இல்லை.

தமிழ்ப் பெண்கள் ஏன் நடிக்க வருவது இல்லையென கேட்கிறார்கள். அவர்கள் நடிக்கவராததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இது மட்டுமில்லாம தமிழ் நடிகைகளுக்கு தமிழ் பேசத் தெரியக் கூடாது. தமிழ் பேசத் தெரிந்தால் இங்கே மைனஸ். ஹலோ ஜி! சலொ... சலோ... என ஹிந்தியில் பேசினால் தான் இங்கு எடுபடும்.

விழாகளுக்கு செல்வதற்கு கூட பயமாக இருக்கிறது. அங்கே நம்முடைய ஃப்ரெண்ட்ஸை பார்த்து பேசினால் கூட அதைப் பற்றி கிசுகிசு எழுதிவிடுகிறார்கள். சிரித்து சிரித்து பேசுகிறார்க்ள் என்று போடுகிறார்கள். ஒன்றாக வொர்க் பண்ணியவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா?

இந்த பத்து வருடத்தில் ஐம்பத்திரெண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் இவ்வளவு சாதிக்க ஒரு ஏணிப்படியாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான். நீங்கள் என்னிடம் உள்ள குறைகளைச் சொல்லுங்கள், எந்த மாதிரி படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நான் அவற்றை திருத்திக் கொள்கிறேன். என்னை வளர்த்து விடும் ஏணியான நீங்கள் நான் இன்னும் வளர உதவலாமே?”

கிளாமர்

”என்னை எந்த விதத்தில் கிளாமராக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் என் முட்டிக்கு மேல் இருக்கும்படியான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு நடித்தது இல்லை. ஸ்லீவ் லெஸ்ஸிற்கு மேல் இருக்கிற டிரெஸ் போட்டதும் இல்லை. என்னுடைய கிளிவேஜ்ஜை காட்டி நான் நடித்ததும் இல்லை. விரும்புகிறேன் படத்தில் எந்த அளவிற்கு கிளாமராக நடித்தேனோ அதேபோல் தான் இப்போதும் நடிக்கிறேன்.”

ஆதங்கம்.

சமையல் வேலைப் பார்க்கும் பெண்ணை ஹீரோ கமெண்ட் பண்ணினார் என எல்லோரும் பேசினீர்களே. ஒரு நடிகையின் படத்தை மார்ஃபிங் செய்து போடும் போது யாரும் தட்டி கேட்கவே இல்லையே. நடிகைகளும் பெண்கள்தானே.

கிசுகிசுக்கள்.

”நான் நடித்த படத்தின் விமர்சனம் வருகிறது என்றால் அதில் ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார் என்று ஒரு வரி மட்டும் எங்கேயாவது நடுவில் வரும். ஆனால் என்னைப் பற்றிய கிசுகிசு என்றால் மட்டும் ஆறேழு வரிகள் வரும். இதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம்.”

என் நண்பர்கள்.

”சேரன், ஷாம், பிரசன்னா, நரேன் இவர்கள்தான் என் நண்பர்கள். இவர்களுக்கு நான் என்ன பட்டுப்புடவை கட்டுகிறேன் என்ற பொறாமை இல்லை. அவர்கள் ஜீன்ஸில் வருவார்கள். இங்கே தமிழ் சினிமாவில் தான் attitude காட்டுகிறார்கள். ஒரு நடிகைகும் மற்றொரு நடிகைகும் இடையே ஒரு போலித்தனமான நட்பு இருக்கிறது. பொறாமை இருக்கிறது. ஒரு விழாவிற்கு வரும்போது சிரித்து பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

வெங்கட் பிரபுவை எனக்கு ஏப்ரல் மாதத்தில் படத்தின்போதேஅவர் இயக்குநராவதற்கு முன்பே நன்கு தெரியும். அதற்காக நான் அவரோடு போன மாதம் பேசினேன். நேற்று பேசினேன் என்று தினமும் அப்டேட் செய்யவேண்டுமாஎன்னுடைய நண்பர்களுடன் நான் பேசுவதைப் பற்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”

காதலா?

”ஸ்நேகாவிற்கு இவரோடு காதல், அவரோடு காதல் என்று நீங்களாகவே எழுதாதீர்கள். இதனால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். பலருடன் பேசமுடியாமலும் போய் இருக்கிறது. இந்த மாதிரியான கிசுகிசுவால் நம்முடைய குடும்பத்திற்குதான் பிரச்னை என்று பேசாமல் போன நண்பர்கள் இருக்கிறார்கள்.”

Friday, June 17, 2011

ப்ரிவியூ ஷோ அனுபவங்கள்


கொஞ்ச காலமாக இந்த ப்ரிவியூ ஷோ பக்கமே போறதே இல்ல. சொந்த காசுல சூன்யம் வைச்சுகிறதை விட, இது ஒரு படி மேல. ஒஸியிலேயே நமக்கு சூன்யம் வைச்சுக்கிற மாதிரியான அனுபவம் இது.


இரண்டரை மணி நேரம் ஒரே சீட்டுல உட்கார்ந்தபடி அணு அணுவாக சாகிறதை முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு போறதுக்கும் ஒரு மன வலிமை வேணும். (சினிமா நிருபர்கள் கதியை நினைத்துப் பாருங்கள்). ஒரு சில படங்களைப் பார்க்கும் போது ப்ரிவியூ தியேட்டருக்குள்ளே ஒவ்வொரு காட்சியிலும் (டென்ஷனில்) எமோஷனாகி கமெண்ட் கூட அடிக்க முடியாது. அந்த இருட்டுக்குள்ளே ஏதாவது மூலை சீட்டுல இயக்குநரோ. அல்லது தயாரிப்பாளரோ இருக்கலாம். ஆனாலும் ஒரு சில சமயங்கள்ல சபை நாகரிகத்தை கூட மனிதனோட உணர்வுகள் ஜெயிக்கிறது உண்டு. அதாவது இடைவேளை தேநீர் நேரத்துல கூட, ‘ஷார்ப்பா மூணு மணிக்கு படம்ன் சொன்னாங்க. மணி இப்ப நாலரை ஆகுது. பெட்டி (அதாவது ரீல் பெட்டி..இப்போ தொழில் நுட்பம் வளர்ந்தாச்சு. இருந்தாலும் சம்பிரதாய வார்த்தை இது) எப்போ வரும். படத்தை எப்ப போடுவாங்க’ என்ற ரீதியில சில கமுக்கமான கமெண்ட்கள் கிளம்பும். ஏறக்குறைய ஹவுஸ் அரெஸ்ட் ரேஞ்சில் ப்ரிவியூ தியேட்டருக்குள்ளே அடைப்பட்ட அப்பாவிங்க மீதி படத்தையும் பார்த்துட்டுதான் வர முடியும். 


படம் முடிஞ்சு வெளியே வரும்போதுதான் இன்னொரு விஷயம் புரியும். திரையில நடிச்ச அந்த நடிகர்கள் எல்லாம் ஒண்ணுமே இல்ல. அவ்வளவு ஏன் நம்ம சிவாஜி கணேசன், கமல் ஹாஸன், விக்ரம், சூர்யா, ஹாலிவுட்டுல மார்லன் ப்ராண்டோ, அல் பாஸினோ, பால் நியூமேன் இவங்களெல்லாம் கூட டம்மி பீஸ்ஸூன்னு கூட தோணும். காரணம் படம் பார்த்த ’களைப்புல’ நம்ம ஜெண்டில் மேன்கள் வெளியே வருவாங்க. வெளியே படத்தோட ஹீரோவோ இயக்குநரோ தயாரிப்பாளரோ அல்லது இவங்க எல்லோருமோ கையைக் கட்டியபடி நிப்பாங்க. படம் முடிஞ்சு வெளியே வரும் போது, எப்படிதான் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்துல நைட் மேட்சுக்கு வைக்கிற ‘ஃப்ளட் லைட்’ மாதிரி பளீச்னு ஒரு சிரிப்பு வருமோ தெரியாது. ‘அவன் இவன்’ படத்துல மாறுகண் வைச்சு வைச்சு பழகின விஷாலுக்கு, ரெடின்னு சொன்னதும் ஆட்டோமேட்டிக்காக நல்ல கண் மாறுகண் மாதிரி மாறிச்சோ அதே மாதிரிதான் இதுவும். இப்படி பண்றதுக்கெல்லாம் தனி திறமை வேணும்.


‘தலைவா..பின்னிட்டீங்க தலைவா.. பிரமாதம்’, ‘அந்த சீன் இருக்கு பாருங்க..சூப்பர்’, ‘பின்னீட்டீங்க ஜி... சான்ஸே இல்ல..’, ‘நல்லாயிருக்கு. நாம தனியா ஒரு மேட்டரே பண்ணலாம்’ என்று மளமளவென பொளந்து கட்டும் கமெண்ட்டுகளோடு கைக்குலுக்குவார்கள் சிலர். அந்தப் பட சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கும். என்னடா இது இப்படி பாராட்டுறாங்களே. பெத்த அப்பா அம்மாவுக்கு தெரியாத தன்னோட புள்ள எவ்வளவு கெட்டின்னு...


என்ன.. ரொம்ப விஷூவலாக யோசிக்கிறீங்க போல...அதை விடுங்க பாஸ். பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் பாஸ்!

Thursday, March 31, 2011

சும்மா ஒரு கானா பாட்டு!

எல்லோரும் பாட்டு எழுதுறாங்களே நம்மாலும் ஒரு கருத்து ஆழமிக்க குத்துப் பாட்டு எழுத முடியுமா என்று யோசித்ததன் விவகார விளைவு... இந்த டோங்குரு கானா பாட்டு. 

பாட்டில் பிழைகள் இருந்தாலோ, புண்படும்படியாக வரிகள் இருந்தாலோ இந்த அறிமுக கானா கவிஞனை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.



«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼...
«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

ࡠ臵 ªó‡´‹ †M†ì¼
ܶ ªê£™½¶ 
ðô è£î™ «ñ†ì¼.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ ºè«ñ£ ç«ðv ¹‚°
Ü¬îŠ ð£˜ˆî£«ô 
ñù²°œ«÷ C‚° ¹‚°.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

ࡠ裶 ªó‡´‹ ݘ°†´
ܶô Ý´¶ 
«ì£ô£‚° îP‚ªè†´.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ àî´ ªó‡´‹ v†ó£ªð˜K
ܬî óC‚°‹
 å¼ Š÷£‚ªð˜K.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ è¡ù‹ ªó‡´‹ ªì£«è£ñ£
Ü¬î‚ è®„ê£
ï£Â‹ å¼ õ£v«è£ìè£ñ£.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ °ó½ô Þ¼‚°¶ °õ£˜†ì¼
«è†ì 虊¹ô
²F ãÁ¶ è£î™ e†ì¼.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ Þ´Š¹ Üð£ò õ¬÷¾
Ü¬îŠ ð£˜ˆî£«ô
êÁ‚°¶ â¡ G¬ù¾.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

࡬ùŠðˆF  á«ó™ô£‹ å«ó 죂
 ࡬ù«ò ²ˆF õ¼‹
«õ£ì£«ð£¡ 죂

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

Ü®‚è® ªè£´‚裫î Iv´ 製
ó£‚ªè† «õ舶ô
ãÁ¶ â¡ ªê™«ð£¡ H™½.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à‡¬ñJô  å¼ ²ù£I
࡬ùŠ 𣘈ñ
ÝA†«ì¡ ªõÁ‹ Ýê£I.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

è£î™ ªó£‹ð ðõ˜ç¹™½
à¡ù£™ ÝA†«ì¡
 Cò˜ç¹™½.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

«ð£´«ø‡® å¼ è†®ƒ
ÜŠð®«ò 
«ð£èô£‹ å¼ «ì†®ƒ.

«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....
«ì£ƒ° «ì£ƒ° «ì£ƒ°¼....

à¡ù£ô è£ù£ èMë¡ Ý«ù¡
Þ‰î Þó£. óMûƒè¼.







.











Tuesday, March 29, 2011

மக்களின் கட்சி. இது நம்ம கட்சி - ‘அடேங்கப்பா கட்சி’. தமிழ் நாட்டின் ஒரு புதிய புரட்சி


மகா ஜனங்களே! மாண்புமிகு கனவான்களே! அருமைமிகு சீமாட்டிகளே! ஜனநாயகத்தின் ஜாம்பவான்களே!

இன்று தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து, அரைவேற்காட்டில் எடுத்த உடைந்த ஆஃப் பாயில் போன்று மாறிவிட்டது மனம். அதையும் கூட எடுத்து பொடிமாஸ் போடலாம் என்று உடன்பிறப்புகள் கையில் குவார்ட்டர் பாட்டில் ப்ளஸ் பிரியாணியுடன் ரவுண்ட்ஸ் வருகிறார்கள்.


இனிமேலும் பொறுக்க முடியாது. அதனால்தான் இப்படியொரு யோசனை தோன்றியது.


அதாவது எந்த கரை(வேட்டி)யும் இல்லாமல், ஒரு கட்சியைத் தொடங்குவது. 


அந்தக் கட்சிக்கு ‘அடேங்கப்பா’ கட்சி பெயரிடுவது.


வருகிற தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் பரவாயில்லை என்று போட்டியிடுவது.


தேர்தலில் போட்டியிடுவது என்றால் அதற்கு வாக்கரிசி மன்னிக்கவும் வாக்குறுதிகள் முக்கியமாயிற்றே.




இதோ என் மனதில் பட்ட சில முக்கியமான வாக்குறுதிகள். அடேங்கப்பா கட்சிக்கு மக்கள் செல்வாக்கு பெருகும் பட்சத்தில் அவர்களது கருத்துக்களையுக் கேட்டறிந்து சில அதி முக்கிய வாக்குறுதிகளும் இத்துடன் இணைக்கப்படும். இதில் எந்த அந்திய சக்திகளோ அல்லது லிபியாவின் கடாஃபியோ, அமெரிக்காவின் ஓபாமாவோ தலையிட முடியாது. இதைக் கேட்கும்போதே ‘அடேங்கப்பா.. சூப்பர்ல’ என்று சொல்ல தோன்றுகிறதா? அதனால்தான் இக்கட்சிக்கு ‘அடேங்கப்பா’ கட்சி என்று பெயரிட தோன்றியது.

இனி வாக்குறுதிகள்


1. இப்போதுள்ள இரு கட்சிகளுமே இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் தர முன்வந்துள்ளதால், அடுத்த தேர்தல் வருவதற்கு முன்பே அவை ’வேலை நிறுத்தம்’ செய்யக்கூடும். அப்போது எந்த அரசியல்வாதிகளும் வரப்போவது இல்லை. அதனால் அடேங்கப்பா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும்  மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் பழுதுப்பார்க்கும் ஒரு டெக்னீஷியனை நமது அரசே நியமிக்கும். அவர் உங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்து கொடுப்பார். அவைகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்பட்டால் அதை அடுத்த தேர்தல் வாக்குறுதியில் இலவசமாக தர வாக்குறுதி அளிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.


2. ஆடு, மாடு தருவார்கள் என்றால், அதை நீங்களே களத்தில் இறங்கி மேய்க்க இயலாது. அதனால் ஒரு தெருவில் உள்ள அனைவருடைய ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக ஒரு நல்ல மேய்ப்பாளனை நமது அடேங்கப்பா அரசே நியமிக்கும். 


3. இலவச அரிசியையும் நீங்கள் பெற்று வருவதால், அதை யார் சமைப்பது? யார் அந்த பாத்திரங்களை கழுவுவது? கவலை வேண்டாம். அடேங்கப்பா அரசு, உங்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும், சமைத்து போடுவதற்கும் ஒரு அருமையான, அழகான ஆயாவை அரசே நியமிக்கும். அவர்களுக்கு நீங்கள் தினப்படி கூட கொடுக்க வேண்டிய அவசியமிருக்காது. அரசே அதையும் ஏற்றுக் கொள்ளும். 


4. இலவச தங்கம் தந்தால் அதை எப்படி நீங்கள் தாலியாகவோ அல்லது நகைகளாகவோ செய்ய முடியும். அதற்கு நீங்கள் கையிலிருந்து காசு போடவேண்டியிருக்குமே. அடேங்கப்பா அரசு அதையும் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் ஒரு நகைக் கடையை அரசே திறக்கும். அங்கே சென்று உங்களுடைய சான்றிதழ்கள் காட்டிவிட்டு உங்களுக்கு விருப்பமான நகையை பெற்றுக் கொள்ளலாம். 


5. ஆண்களுக்கு எந்தவிதத்திலும் பெண்கள் இளைத்தவர்கள் அல்ல. இதை அடேங்கப்பா கட்சி  என்றும் ஓங்கி உரக்கச் சொல்லும். அதனால் இனி வரும் காலங்களில் பெண்களின் பிரசவ காலத்தில், முதல் ஐந்து மாதம் ஆண்கள் கருவைச் சுமக்கவும், அதற்கு பிறகு பெண்கள் கருவைச் சுமக்கவும் வழி செய்யப்படும். இதற்கான விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படும். 


6. வீதிதோறும் கொசுத் தொல்லையை ஒழிக்க புகையை மூச்சுமுட்டும் அளவுக்கு, வயசு பசங்க சைட் அடிப்பதற்கு தடையாக இருக்கும் விதத்தில் புகையை விட்டுவிட்டு செல்லும் முறை அடியோடு ஒழிக்கப்படும். அதற்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற கொசு ஒழிப்பு காட்சியில் இடம்பெற்ற ‘சிட்டி ரோபோ’வை நிஜமாகவே உருவாக்கி அதை மக்கள் நலனுக்காக களத்தில் இறக்கும் திட்டம் செயல்படுத்தபடும். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் ‘ஸ்டான்வின்ஸ்டைன் ஸ்டூடியோ’வுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.


7. நாள் முழுக்க கடுமையாக உழைத்து, சம்பாதிக்கும் பணத்தில் குவார்ட்டருக்கே அதிகம் செலவிடும் ’குடி’மக்களின் குடும்பங்களைக் காக்க, தாய்மார்களின் கண்ணீரைப் போக்க, அடேங்கப்பா அரசே வாரத்திற்கு இரு முறை இலவச குவார்ட்டர்களை டாஸ்மாக் மூலம் அளிக்கும். இதற்காக ஒரு உறுப்பினர் அட்டை வழங்கப்படும். அட்டையைக் காட்டி இருமுறையோ அல்லது இரண்டையும் சேர்த்து வாரத்திற்கு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளலாம்.


8. இவ்வளவு செய்த பிறகும் நீங்கள் வீட்டில் வெட்டியாகவே இருக்கப்போவது உறுதி என்பதால், உங்களது ஆரோக்கியத்தில் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு. அதனால் வெட்டியாகவே இருந்தால் மிகவும் அயர்ச்சி ஏற்படுமென்பதால், அதற்காக தாய்லாந்திலிருந்து மஸாஜ் எக்ஸ்பர்ட்டுகள் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை இலவசமாக மஸாஜ் செய்து உங்களை இந்த் இலவச வாழ்க்கையை அனுபவிக்க உற்சாகப்படுத்துவார்கள் என்பதற்கு அடேங்கப்பா கட்சி உறுதியளிக்கிறது.

இன்னும் பல திட்டங்கள் அடேங்கப்பா கட்சியின் அரசில் நிறைவேற்றப்படும். அவை அனைத்தும் இப்போதே சொன்னால் அதை யாராவது ஈ அடிச்சான் காப்பியாக அடித்துவிட்டு உரிமை கொண்டாடிவிடுவார்கள் என்பதால் அதை இனி வரும் காலத்தில் தெரிவிக்கிறோம்.


அடேங்கப்பா அரசின் வாக்குறுதிகள் பிடித்த்திருக்கும் பட்சத்தில் மக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

கடமையைச் செய்! பலனை எதிர்பார்!    பொறுத்தது போது பொங்கியெழு!

Wednesday, March 23, 2011

தமிழீழ தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் மறைவுக்கு யார் காரணம்?

அண்ணன் பிரபாவை சிங்களக் கூட்டத்தின் ராஜ பக்‌ஷேவும் அவரது அதிகாரத்திற்கு உட்பட ராணுவமும்தான் நயவஞ்சமாகவும்,  கொடூரமாகவும் இம்மண்ணிலிருந்து விடைக் கொடுக்க வைத்ததாக பல செய்திகள், பல யூகங்கள்.


உண்மையில் அண்ணனின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?


உங்களது அரசியல் சார்புடைய,  ஆதிக்க சாதிய உணர்வுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொரு கோணத்திலும் பார்க்க முயலுங்கள்.


ஈழத்தில் நம் தமிழ் உறவுகள் கொடூரமாக வேட்டையாடப்பட்ட போது கமர்ஷியல் சினிமா பாணியில் பல்வேறு பஞ்ச் டயலாக்குகளுடன் கொதித்து எழுந்தவர்கள் நம்முடைய தமிழ் நட்சத்திரங்கள்தான்.


உடனே கூட்டம் போட்டார்கள். சூளுரைத்தார்கள். உயிர் போகுதே என்று க்ளீசரின் உதவியில்லாமல் கண்ணீர் காட்டினார்கள்.  வீறுக் கொண்டு ராமேஸ்வரத்திற்குச் சென்று கூட்டம் போட்டார்கள். அதில் சிலர் தகாத வார்த்தைகளில் ராஜ பக்‌ஷேவைத் திட்டி தீர்த்தார்கள்.


இங்கே தமிழன் வேண்டுமானால் சூடு சுரணை இல்லாதவனாக இருக்கலாம். எவ்வளவு திட்டினாலும், எவ்வளவு அடித்தாலும் இவன் ரொம்ப நல்லவன் என்ற பெயரை தக்க வைப்பதற்காகவே அழவும் மாட்டான். ரியாக்ட் பண்ணவும் மாட்டான்.


ஆனால் ராஜபக்‌ஷேவுக்கு சூடு, சுரணை எல்லாமே இருக்கிறது. அந்த மாபாதகன் செய்த கொடுமையைப் பார்க்கும் போது அப்படிதான் உணர முடிகிறது.


எப்படி என்கிறீர்களா?


நான் சொல்வதை மனத்திரையில் சில காட்சிகளாக கொஞ்சம் ஓட்டிப் பாருங்கள்.


நீங்கள் உங்கள் வீட்டு மாடியில், பால்கனியில் அமர்ந்தவாறு செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.


கீழே திடீரென யாரோ சிலர் சண்டை போடும் சத்தம் கேட்கிறது.


கீழே பார்க்கிறீர்கள்.


இரண்டுபேர் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.  அதில் ஒருத்தர் கொஞ்சம் நம்மூர் ஹீரோவை போல பலசாலியாக இருக்கிறார். இன்னொருவர் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் போல அப்பாவியாக இருக்கிறார்.


இருவருக்குமிடையில் நடக்கும் சண்டையில் பலசாலி அந்த அப்பாவியைப் போட்டுத் தாக்கும் எண்ணத்தில் ஆவேசமாக இருக்கிறார்.


இங்கேதான் நம்ம ஹீரோக்கள் எண்ட்ரீ சமாச்சாரம் வருகிறது.
பால்கனியில் இருக்கும் நீங்கள், ‘ஏய் யாருடா அது, அங்கே சண்டைப் போடுறது? 
ஓ...நீயா..அந்த அப்பாவியை விட்டுடு. அவன் என் ஆளு. நான் சொல்றதையும் மீறி அவன் மேல கை வைச்சிடுவீயா..என்கிறீர்கள்.


உடனே அவனுக்கு சூடு, சுரணை எல்லாம் டாப் கியரில் எகிறுகிறது.


’நான் கையை வைச்சா நீ என்ன பண்ணுவே?’ என்று உங்களை முறைக்கிறான்.


‘நீ வைச்சு பாரு. அப்புறம் நான் யார்னு காட்டுறேன்’ என்று உங்கள் வீட்டுக்குள், முழு பாதுகாப்புடன் இருந்தபடியே பஞ்ச் டயலாக் விடுகிறீர்கள்.


இதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்....


ஏதோ சண்டை வந்திருந்தாலும், அதனால் பகைதான் அதிகமாகியிருக்கும். ஆனால் ஆக்ரோஷமான தாக்குதல் ஏற்பட்டிருக்காது. 


நீங்கள் சீறிப்பாய்ந்ததைப் பார்த்தபிறகும் அந்த அப்பாவியை அந்த சண்டாளன் விட்டு வைப்பானா என்ன?


போட்டு துவைத்து எடுத்திருக்க மாட்டானா?




இதுதானே சாமீ நடந்துச்சு. வேகமாக குரல் கொடுப்பதைவிட, விவேகமாக செயல்படுவதுதானே நமக்கு நல்லது. 


அதற்கு வழியே இல்லாமல் குரல் கொடுத்து, பில்டப் கொடுத்து அநியாயமாக ஒரு தலைவனை நாம் பறிக்கொடுக்க வேண்டியதாயிற்றே....


உங்களுக்கு அதான் நம்ம நட்சத்திரங்களுக்கு அப்படி உணர்வு இருந்திருந்தால், ராமேஸ்வரத்தில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு குரல் கொடுப்பதை விட்டுவிட்டு,  ஒரு தோணியில் ஏறி இலங்கைக்குச் சென்று வீர மறத் தமிழனாக குரல் கொடுத்திருக்கலாமே. 


நீங்கள் உணர்வோடு சென்றிருந்தால், ஒட்டுமொத்தமாக நட்சத்திரங்கள் இலங்கைக்குச் சென்றிருந்தால் உங்களைக் கொல்லும் தைரியம் ராஜ பக்‌ஷேவுக்கு இருக்குமா?


இனியும் பில்டப் களுக்காக குரல் கொடுக்காதீர்கள்...ப்ளீஸ்...


உங்களது மூகமுடி இமேஜ்காக அப்பாவி தமிழனை இனியும் காவுக் கொடுக்காதீர்கள்...ப்ளீஸ்...