Tuesday, December 21, 2010

தனுஷ்

உத்தமபுத்திரன் தனுஷ் வீறுக் கொண்டு வேங்கையாக போகிறார். உபயம் சிங்கம் தந்த ஹரி. பொள்ளாச்சியில் பதுங்கிக் கொண்டிருந்த தனுஷ் ரிலாக்ஸாக பேச ஆரம்பிக்கிறார்.

‘சிங்கம்’ கொடுத்த ஹரியுடன் இணைந்து ’வேங்கை’யாக போகிறீர்களே. கதை எப்படி?

“இது பக்காவான ஹரி சார் ஸ்டைல் படம். ஒரு சிம்பிள் கதை. பரபரக்கிற திரைக்கதை. சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் உள்ள படமாக ’வேங்கை’ இருக்கும். இதில் நான் பதுங்கிப் பாய்கிற வேங்கையாக ஆக்‌ஷன் பண்ண போகிறேன். நான் பதுங்குவதற்கு காரணம் என்னுடைய இலக்கை கண்டுப் பயப்படுவதாக அர்த்தமில்லை. அந்த இலக்கு மிஸ்ஸாகி விடக்கூடாதே என்ற விஷயம்தான். ‘படிக்காதவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் தமன்னாவுடன் நடிக்கிறேன். ‘வேங்கை’ ஒரு கமர்ஷியல் விருந்தாக இருக்கும்.”

பெர்ஃபார்மராக இருக்கும் நீங்கள் இன்னும் மெனக்கெடலாமே என்று தோன்றுகிறதே? ரிஸ்க் எடுக்க தயங்குவது போல தெரிகிறதே?

“ஒரே மாதிரியான படங்களில் மட்டுமே நடிக்காமல், விதவிதமான படங்களில் மாறி மாறி நடிக்கதான் ஆசைப்படுகிறேன். ‘பொல்லாதவன்’ ஒரு ஆக்ஷன் படம். அடுத்தது ‘யாரடி நீ மோகினி’ ஒரு குடும்பப் படம். ‘படிக்காதவன் ஆக்ஷன் படம். ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ இரண்டும் காமெடி கலந்த ஆக்ஷன் படங்கள். ‘மாப்பிள்ளை’ ஒரு ஜாலியான படம். ’ஆடுகளம்’ பக்காவான ஆக்ஷன் படம். இப்போது நடிக்கும் ’வேங்கை’ சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம். இப்படி ஒரே ட்ராக்கில் போகாமல் படம் பண்ணதான் எனக்கு ஆசை. சீரியஸான ஹீரோவாக ஆக்ஷன் பண்ணுவதில் அதிக ரிஸ்க் இல்லை. காமெடியாக நடிப்பதில்தான் நாம் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். அதைதான் நான் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஒவ்வொரு படத்திலும் உங்களுக்கு என்ன தேவை என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

”ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு போகும் முன்னாடி நான் இயக்குநர்களுடன் அமர்ந்து எனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் முடிவு பண்ணிய பிறகே ஸ்பாட்டுக்கு போகிறேன். அடுத்ததாக நான் ஹோம் வொர்க்கை அதிகம் நம்புகிறேன். ஒரு படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கான ஹோம் வொர்க்கை பண்ணுகிறேன். படம் ரிலீஸாகிற நாள் வரைக்கும் என்னுடைய ஹோம் வொர்க்கை தொடர்கிறேன். அப்படி கடினமாக உழைத்தால் நிச்சயம் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதுதான் எனக்கு நடக்கிறது.”

உங்களுக்கான கதாபாத்திரங்களை, கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

“என்னுடைய கதாபாத்திரம் என்னோடு எந்தளவிற்கு ஒன்றிப்போய் இருக்கிறது என்பதைதான் முதலில் யோசிப்பேன். அட இது நமக்கு நடந்த சமாச்சாரமாச்சே, இது பக்கத்துல வீட்டில் நடந்த சம்பவம் போல இருக்கிறதே, இப்படிதானே ஃப்ரெண்ட்ஸ்களுடன் அரட்டை அடித்தோம் என்கிற மாதிரியான விஷயங்களைத்தான் எடுத்து நடிக்கிறேன். இது ஒரு பொழுது போக்கு இண்டஸ்ட்ரி. அதனால் கமர்ஷியலை எல்லோரும் ரசிக்கிற மாதிரியான யதார்த்தமான விஷயமாக. கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இதற்கேற்ற மாதிரி அமைகிற கதாபாத்திரங்களைத் தேடிப் பிடித்து நடிக்கிறேன்”

ஸ்லிம் தனுஷ் எப்போதுதான் ஒரு ரவுண்ட் சதைப் போடுவதாக உத்தேசம்?
.
”எதுக்கு இப்போது அவசரம். இந்த உடல்வாகுக்கு, இந்த வயதுக்கு ஏற்ற மாதிரி நடிக்கக்கூடிய கதைகள் இன்னும் இருக்கிறதே. அதையெல்லாம் முடித்த பிறகு பார்க்கலாம். அதற்குள் நமக்கும் வயது ஏறிடும். அதற்கேற்ற அனுபவம் இருக்கும். மெச்சூரிட்டியும் அதிகமிருக்கும். அந்த நாளுக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் எடைப் போட்டு நடிக்கலாம் பாஸ்.”

உங்களுக்கு டைரக்ஷன் மீதும் ஒரு கண் இருக்கிறதே. நீங்கள் இயக்குநர் ஆவது எப்போது?

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டைரக்ஷன் பண்ண ஆசை. ஆனால் இப்போது இருக்கிற கமிட்மெண்ட்ஸ் அதையெல்லாம் தாண்டி போய்விட்டது. சின்னவயதிலிருந்தே சின்ன சின்ன ஷாட்களை எழுதிவைக்கிற பழக்கம் எனக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் இதையெல்லாம் எழுதவில்லை. ஆனால் என்னிடம் கதைகள் அதிகமிருக்கிறது. இப்போதைக்கு டைரக்ஷன் பண்ணுவதற்கான நேரம் வரவில்லை என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

விடலைப் பையானாக இருந்த தனுஷிடம் இப்போது நல்ல மாற்றங்கள் தெரிகிறதே. அது எப்படி?


“வயதாகிவிட்டது பாஸ். நான் ஸ்கூல் ட்ராப் அவுட். கல்லூரிக்குப் போய் படிக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் நான் கற்றுக் கொண்டது எல்லாமே வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்ததுதான். என் வயதுக்கு நான் பார்த்தது அதிகம். எனக்கு கிடைத்த வெற்றிகளாகட்டும், தோல்விகளாகட்டும் எல்லாமே என்னுடைய வயதுக்கு அதிகமானதுதான். 2004 லிருந்து 2006 வரைக்கும் சினிமாவில் நான் சந்தித்த சில சறுக்கல்கள் கற்றுக் கொடுத்தது அதிகம். நான் சந்தித்த நபர்கள், என்னை சந்தோஷப்படுத்தியவர்கள், வருத்தப்பட வைத்தவர்கள் என எல்லோருமே எனக்கு கொடுத்தது அனுபவங்கள்தான். இந்தப் பாடங்கள்தான் என்னை இந்தளவிற்கு மெச்சூர்டான மனிதனாக மாற்றியிருக்கிறது.” என்று சிரிக்கிறார்.

விஜய்


”வாங்க்ண்ணா..நாம பார்த்து, பேசி கொஞ்ச நாள் ஆயிடுச்சுல்ல. இப்ப ஆளாளுக்கு... அவங்களுக்கு தோணுகிற யூகங்களை வைச்சு புதுசுபுதுசாக எழுதுறாங்க. அதைப் பார்த்துட்டு இன்னும் சிலபேர் அவங்களோட யூகங்களையும் கொஞ்சம் சேர்த்து இன்னும் புதுசாக எழுதுறாங்க. இது இப்படியே போயிட்டு இருக்கு.. படிச்சுப்பார்த்தா பல விஷயங்கள் எனக்கே கொஞ்சம் புதுசாக இருக்கு.(சிரிக்கிறார்). சில விஷயங்கள் நமக்கே புரியாத அதிரடி நியூஸாக இருக்கு(மீண்டும் சிரிக்கிறார்). சரி வாங்க்ண்ணா நாம ரிலாக்ஸாக பேசலாம்” என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழவிடுகிறார் விஜய்.



கொஞ்ச வருஷமாகவே துப்பாக்கியைத் தூக்கிட்டு இருந்த நீங்க இப்பதான் ’காவலன்’ மூலமாக காதலுக்காக ரோஜாவைப் பிடிச்சிருக்கீங்க போல...



“ஆமாங்ண்ணா. ’பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’னு ஒரு யதார்த்தமான, அப்பாவித்தனமான கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போதே, ‘திருமலை’யிலிருந்து துப்பாக்கி, கத்தின்னு கொஞ்சம் ஆக்ஷன் ரூட் மாறிட்டேன். சரி எவ்வளவு நாள்தான் இப்படி துப்பாக்கியையே தூக்குறது... மீண்டும் காதலுக்காக ரோஜாவைப் பிடிக்கலாமேன்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சித்திக் சாரிடம் ’காவலன்’ கதையைக் கேட்டேன். ஆனால் இப்பதான் அந்தக் கதையில நடிக்குறதுக்கான சரியான சூழ்நிலை செட்டாகியிருக்கு. மலையாளத்துல பண்ணிய இதே கதையில இப்ப நமக்குன்னு தேவைப்படுற அதிரடி மாற்றங்களைச் சேர்த்து ஃப்ரெஷ்ஷான காவலனை உருவாக்கிட்டோம். என்னோட அப்பாவித்தனமான கதாபாத்திரம், படத்தோட கடைசி இருபது நிமிட காட்சிகள் இந்த இரண்டு விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். வசனம் அதிகமில்லாம, கதாபாத்திரங்களின் ரியாக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கார் சித்திக் சார்.. கிட்டதட்ட ‘காதலுக்கு மரியாதை’ படத்தோட க்ளைமாக்ஸை பார்க்கும்போது மனசுக்குள்ளே ஒரு பாரம் இருக்குமே அதே ஃபீல் காவலன் க்ளைமாக்ஸிலும் இருக்கும்.. ’ஃப்ரெண்ட்ஸ்’ படத்துல சூர்யா, வடிவேலு சார் கூட நானும் சேர்ந்து பண்ணினது மாதிரியான ஸ்லாப்ஸ்டிக் காமெடி கலாட்டா இதிலும் இருக்கும். இதுல வடிவேலு சார், அஸின், நான் எங்களோட மூணு பேர் கூட்டணி பண்ற ரவுசு சுவாரஸ்யமா இருக்கும் என்னையும் கொஞ்சம் பழைய ‘ஃபீல் குட்’ விஜயாக பார்க்கலாம்..”



ஒரு வழியாக எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரி மீண்டும் ரோஜாவைத் தூக்கிட்டீங்க. அந்த ஒரு சேஞ்ச் ஒவர் எப்படியிருக்கு உங்களுக்கு?



“2005 க்கு பிறகு ’திருமலை’,. ’கில்லி’, ‘திருபாச்சி’, ‘சிவகாசி’ன்னு வரிசையாக ஆக்ஷன் படங்களையே பண்ணினேன். அந்த ஃபார்மூலா தொடர்ந்து ஹிட்டாச்சு. ஒரே ஃபார்மூலாவை பாத்துபார்த்து போரடிக்கக்கூடாதுன்னு நம்ம ரூட்டை மாத்தலாம்னு நினைச்சேன். கொஞ்சம் வேறு மாதிரியான படங்கள் பண்ணலாமேன்னு தோணுச்சு. ஆனால் பல தயாரிப்பாளர்கள் ஆக்ஷன் படங்களையே பண்ணுங்களேன்னு சொன்னாங்க. ‘காவலன்’ ஸ்கிரிப்ட்டையே ஒரு தயாரிப்பாளரிடம் முன்பு சொன்னப்ப, ‘கதை நல்லாயிருக்கு. ஆனால் நீங்க மாஸ்ஸான படம் பண்ணுங்க’ன்னார். இப்படி எல்லோரும் விருப்பப்பட்டதால நான் ரூட் மாறமுடியாம போச்சு.. அப்புறம் நான்தான் ‘காவலன்’ மாதிரி ஒரு ஃபீல் குட்’ படம் பண்ணலாமேன்னு முயற்சி எடுத்தேன். அடுத்தது ‘வேலாயுதம்’. ஆகஷன் படம். இனி நம்ம ரூட் இப்படி மாறி மாறிதான் இருக்கும்.”





’காவலன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவுல கூட நீங்க, ‘படங்கள் மீது உண்மையான காதல் இருந்தால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுக்கலாம், வெளிடலாம்’னு சொன்னீங்களே. அது ஏன்?



”முன்னாடி படமெடுப்போம். பிறகு நமக்கு செட்டாகுற விநியோகஸ்தர்கள் குரூப் அதை வெளியிடுவாங்க. இப்ப அந்த ட்ரெண்ட் மாறியிருக்கு. இது ஒரு நல்ல ட்ரெண்ட்தான். நம்ம படத்துக்கு பெரிய ரீச் கிடைக்கிறது. நல்ல பிஸினெஸ்ஸூம் நடக்குது. ஆனால் அதேநேரம் ஒரு ப்ராஜெக்ட் மீது ஒருத்தருக்கு உண்மையான விருப்பமும், காதலும் இருந்தால் அவங்களும் அப்படத்தை வாங்கி வெளியிடணும். அப்பதான் இன்னும் நிறைய பேர் புதுசாக வருவாங்க. பல பெரிய கார்பொரேட் நிறுவனங்களும் படமெடுக்க வருவாங்க. தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய படமெடுத்தால்கூட அதை வாங்கி வெளியிட அதிகம்பேர் இருப்பாங்க. இப்போது கிடைத்திருக்கும் பெரிய ரீச்சை போலவே இதனால் இன்னும் பெரிய ரீச் கிடைக்கும். சினிமாவுல நிறைய பேரோட பங்களிப்பும் இருக்கும்”.






பஞ்ச் டயலாக் பேசுறது தனிப்பட்ட முறையில் பிடிச்சிருக்கா? உங்களுக்கு பிடிச்ச டயலாக் எது?



“கதையோடு வந்தாதான் எனக்கு பஞ்ச் டயலாக் பிடிக்கும். வேணுமேன்னு அடாவடியா அதை திணிச்சு, அதை பேசுறது பிடிக்காது. ஆனால் இதையும் மீறி சில தடவை அப்படி அமைஞ்சிடுச்சு. படம் பார்க்கும்போது அட இதை தூக்கியிருக்கலாமேன்னு தோணியிருக்கு. ஒரு பொறி இருக்கணும்னா. அப்படீன்னா ஓ.கே. உதாரணத்துக்கு ’வாழ்க்கை ஒரு வட்டம். தோற்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிற்வன் தோற்பான்.’ இது சினிமா மட்டுமில்ல எல்லோருக்குமே பொருந்தும். இந்த டயலாக் கதைக்கும் பொருத்தமாக இருந்துச்சு. அடுத்ததாக எனக்கு பர்ஸனலாகவும் இருக்கிற விஷயம்.’ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.’ நான் உண்மையிலேயே அப்படிதான்.”





காய்ச்ச மரம்தான் கல்லடி படும்பாங்க. அதுக்கேத்த மாதிரி உங்களைப்பத்தி எஸ்.எம்.எஸ், இமெயில்கள்ல நிறைய கமெண்ட்கள் வருதே..

“என்னைப்பத்தி என்கிட்டேயே யாராவது நேரடியாக கமெண்ட் அடிச்சா கூட அதுக்கு பதில் கமெண்ட் அடிக்க மாட்டேன். அப்புறம் இந்த எஸ்.எம்.எஸ் களுகெல்லாம் ஏன் பதில் சொல்லணும். நாம பதில் சொல்லி அடுத்தவங்களை ஏன் காயப்படுத்தணும். அடுத்தவங்களைக் காயப்படுத்துற புன்னகை கூட தப்புதான். பொறுமை ரொம்ப முக்கியம்ணா. கமெண்ட்கள்ல நல்ல விஷயங்கள் இருந்தா அதை மனசுக்குள்ளே எடுத்துக்குறேன். இல்லைன்னா அதைப்பத்தி ஏன் யோசிக்கணும்.”





உங்கள் அப்பா, ’விஜய் மாதிரியான இளையதலைமுறையினர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிறாரே. அது நடக்குமா?

“அண்ணா இந்த விஷயம்பத்தி எவ்வளவோ சொல்லிட்டேன். மக்களாலதான் நான் இன்னிக்கு இந்த நல்ல இடத்துல. இவ்வளவு உயரத்துல இருக்கேன். அதுக்கு கைமாறாக மக்களுக்கு நான் நல்லது செய்யணும். ஆனால் அதுக்கான நேரமும், சூழ்நிலையும் அமையும் போது பார்க்கலாம்.”







Monday, December 20, 2010

நீது சந்திரா பேட்டி

“எனக்கு எங்கெல்லாம் நல்ல ஸ்கிர்ப்ட் கிடைக்குதோ அந்த மொழிகள்ல நான் நடிப்பேன். குறிப்பாக எனக்கு தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு. இங்கேதான் அருமையான ஸ்கிரிப்ட்களை எடுக்கிறாங்க. புதுப்புது முயற்சிகள் நடக்குது. நல்ல டெக்னீஷியன்கள் இருக்காங்க. கதாபாத்திரங்களை அழகாக காட்டுறாங்க.” என்கிறார் ’பாலிவுட்டின் செக்ஸி சைரன்’ நீது சந்திரா. ‘யாவரும் நலம்’ படத்தில் ஹோம்லியாகவும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளையில்’ கதகதப்பாகவும் கிறங்கடித்த அதே ஸ்லிம் ப்யூட்டிதான். ‘யுத்தம் செய்’ படத்தில் இயக்குநர் அமீருடன் கலக்கல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவரிடம் பேசிய போதுதான் இப்படி நம்ம தமிழ் சினிமாவை புகழ்ந்து தள்ளினார்.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை இப்படி புகழ்ந்து தள்ளிறீங்களே. வழக்கம் போல தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் இங்கேயே செட்டிலாகிடுவீங்களா?

(ஹா..ஹா.. ஹா..)அழகாய் வாய்விட்டுயே சிரித்தபடி, “ஏன் கூடாது. சென்னையில ஒரு வீடு வாங்கணும்னு ஆசை புதுசா வந்திருக்கு. இன்னொன்னு தெரியுமா? என்னைப் பார்க்கிறவங்க எல்லோருமே, ‘நீங்க சென்னையா?’ன்னுதான் கேட்கிறாங்க. நானும் சந்தோஷமாக ‘ஆமாம்’னு தலையாட்டிடுவேன். அந்தளவுக்கு சென்னை எனக்கு செட்டாகிடுச்சு.”

உங்ககிட்ட ரொம்ப உஷாராக இருக்கணும்னு பாலிவுட்டுல சொல்றாங்களே. அப்படீன்னா தற்காப்புக் கலையான ‘டேக்வ்ண்டோ’வுல நீங்க பிளாக் பெல்ட் வாங்கினது உண்மைதானா?

“உண்மைதான். சரியான் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். எனக்கு ஆக்ஷன்னா ரொம்ப பிடிக்கும்.”

இப்படி மிரட்டுறீங்களே, அப்படியொரு சந்தர்ப்பம் அமைஞ்சு சண்டை போடுற காட்சி வந்தால் எந்த ஹீரோ கூட சண்டைப் போட ஆசை?

“விக்ரம். அவர் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் சூப்பராக சண்டை போட்டுகிட்டே இருக்கார். நல்ல ஆக்ஷன் ஹீரோ. சூப்பர் நடிகரும் கூட. வாய்ப்பு அமைஞ்சா விக்ரமை ஒரு கைப் பார்த்துட வேண்டியதுதான்.”

பாலிவுட் டிக்ஷ்னரியில நீது சந்திரான்னா ’கான்ட்ரோவெர்ஸி சந்திரா’ன்னு தான் சொல்றாங்களே. கான்ட்ரோவெர்ஸிக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பொருத்தம்?

“அது ஏன்னு எனக்கு இன்னைக்குவரைக்கும் தெரியல. ஆனால் என்னை ‘கான்ட்ரோவெர்ஸி கிட்’னுதான் அங்கே கூப்பிடுறாங்க. சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் சினிமா இன் டஸ்ட்ரியோடு கலந்த சமாச்சாரங்கள். அதனால் நான் எதையும் கண்டுக்கிறது இல்ல. ஆனால் என்னைதான் அதிகம் குறி வைக்கிறாங்க. என்ன பண்றது.”

ஒரு பிரபல இதழுக்காக பிகினியில் மற்றொரு மாடலுடன் கொஞ்சம் நெருக்கமாக போஸ் கொடுத்து இந்தியாவையே சூடாக்கினீங்களே. எங்கே இருந்து வருது இந்த தைரியம்.?

“நான் ஒரு நடிகை. நட்சத்திரங்கள் ஹிப்பொகிராட்ஸ் தான். எல்லோருமே ஹாலிவுட் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்படுறாங்க. இந்தியாவுல இருந்து போனால் ஹாலிவுட் படங்கள்ல புடவையிலும், சுரிதாரிலும்தான் நடிக்கச் சொல்வாங்களா என்ன? ஹாலிவுட் படங்கள்னு வந்தால் உங்களை ஒரு நடிகையாகதான் பார்ப்பாங்க. இந்திய நடிகையா இல்ல எங்கேயிருந்து வந்திருக்கீங்கன்னு யோசிக்க மாட்டாங்க. இவ்வளவுக்கும் நான் ஒரு பெண்ணோடுதான் போஸ் பண்ணினேன். அந்தப் பெண்ணை நான் தொடாமல் தான் இருப்பேன். என்னுடைய எக்ஸ்பிரஷன்னைதான் காட்டியிருப்பேன். ஹிந்தியில நான் நடிச்ச ‘டிராஃபிக் சிக்னல்’ படத்தைப் பார்த்திருக்கீங்களா? அதுல அவ்வளவு கருப்பா, ரோட்டோரமாக சிக்னல்கள்ல நின்னு நடிச்சிருப்பேன். அதைப் பார்த்து அது நான் தானான்னு ஆச்சர்யப்படுவீங்க. இப்படி விதவிதமாக வித்தியாசம் காட்டினால்தானே நடிகை. இன்னைக்கு பெரும்பாலான பேர் லேப் டாப்ல பிகினி இருக்கிற பெண்ணோட படத்தைதான் ஸ்கிரீன்ல வைச்சிருக்காங்க. அப்புறம் ஏன் என்னை மட்டும் குறி வைக்கிறீங்க?”

‘அவதார்’ புகழ் ஜேம்ஸ் க்மெரூன் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சா, அந்தப் படத்துல நிர்வாணமாக ஓடவும் நான் ரெடின்னு ஒரு பத்திரிகை பேட்டியில வெளிப்படையாக சொல்லியிருக்கீங்களே.“ஐயோ அது உண்மையில்ல. ஜேம்ஸ் க்மெரூன் படத்துல நடிக்க ஆசையான்னு கேட்டாங்க. அதுக்கு நான் ’ஆமா அவரோட படம்னா யார்தான் வேண்டாம்னு சொல்ல்வாங்க’னு சொன்னேன். உடனே ’அவரோட பெரிய படங்களில் ஹீரோயினை நிர்வாணமாக ஷூட் பண்ணுவாரே’ திரும்ப கேட்டாங்க. அதுக்கு ‘முதல்ல வாய்ப்பு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்னு சொன்னதைதான் இப்படி எழுதிட்டாங்க. ஜேம்ஸ் க்மெரூன் இல்ல கடவுளே படமெடுத்தாலும் நான் நிர்வாணமாக நடிக்க மாட்டேன்.”

தமிழ் சினிமாவின் ’பவர் ஃபுல் - யூத் 10’

தமிழ் சினிமாவின் ’பவர் ஃபுல் - யூத் 10’

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தலை நிமிர்ந்து நிற்கும் ரஜினி காந்த், கமல் ஹாஸன், இவர்களோடு கைக் கோர்த்திருக்கும் அஜீத், விஜய், விக்ரம் என நட்சத்திர ஜாம்பவான்கள் ஒரு பக்கம். மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர் என ட்ரெண்ட் செட்டர்களாக நம் மனதைக் கவரும் இயக்குநர்கள் மற்றொரு பக்கம். ஏ.வி.எம்., சூப்பர் குட் ப்லிம்ஸ், ஆஸ்கார் ப்லிம்ஸ், ’கலைப்புலி’ தாணு என பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இளைய ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என இசை வித்தகர்களும், பி.சி. ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன், கே.வி.ஆனந்த் என் ஒளி ஓவியர்களும் இன்னொரு பக்கமுமாக அண்ணாந்துப் பார்க்கும் உயரத்தில் இருக்கிறார்கள். இவர்களின் வழியில் இன்று அடுத்த தலைமுறையில் சக்திவாய்ந்தவர்களாக இருக்கும் ’பவர் ஃபுல் - யூத் 10’ பட்டியல் இதோ உங்களுக்காக.

1. சூர்யா

சிவகுமாரின் மகன் என்ற ஒரே துருப்புச் சீட்டுடன் நுழைந்து, படிப்படியாக தன்னை கமர்ஷியல் நடினாக வளர்த்துக் கொண்ட சூர்யா, இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸின் செல்லம். ‘பிதாமகன்’ மூலம் தனது நடிப்பின் புதிய பரிமாணத்தைக் காட்டிய சூர்யாவுக்கு வசமாய் வந்தன ’காக்க காக்க’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ’அயன்’ஆகிய படங்கள். தற்போது ‘சிங்கமாகவும்’ கர்ஜிக்கிறார். அஜீத், விஜய், விக்ரம் வழியில் சம்பள விஷயத்திலும் மளமளவென முன்னேறியிருக்கிறார். இளசுகள் மட்டுமில்லாமல், குடும்பத்தில் உள்ளவர்களையும் தன் மெனக்கெடலால் வளைத்துப் போட்டிருப்பது இவரது வெற்றிக்கு காரணம்.

2. சன் பிக்சர்ஸ்

2008-ம் ஆண்டில் சினிமாவிற்குள் உதயமானபோதே விஸ்வரூபம் எடுத்த தயாரிப்பு நிறுவனம். எந்தப் படமாக இருந்தாலும் அதை தனது விளம்பர யுக்திகளால் ஹிட்டாக்க முடியுமென்பதை பல முறை நிரூபித்திருக்கும் சினிமா சாணக்கியன். ’எந்திரன்’ இந்நிறுவனத்தின் முதல் நேரடித் தயாரிப்பாக இருந்தாலும் இதுவரையிலான இரண்டு ஆண்டுகளில் சுமார் முந்நூற்றி இருபது கோடிகள் வரை சினிமாவில் இறக்கிவிட்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

3. உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வரின் மகன் என்ற இமேஜை சினிமாவிற்குள் கொண்டு வராதது, வித்தியாசமான படமென்றால் உடனே அதை வாங்கி திரையிடுவது, தன்னுடைய தயாரிப்பு என்றால் கதைக்கேற்ற பட்ஜெட்டை தாராளமாக அதிகரிப்பது உதயநிதி ஸ்டாலினின் மிகப் பெரிய பலம். இவரது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்த, உரிமைப் பெற்று வெளியிட்ட படங்கள் கமர்ஷியலாகவும் பேசப்படுகின்றன. இளம் தயாரிப்பாளர்களில் இன்று உதயநிதி முக்கியமானவர்.


4. சசிகுமார்

பாலா, அமீர் பட்டறையிலிருந்து வந்திருக்கும் சசிகுமார் தன்னுடைய குருநாதர்களின் பெயரைக் காப்பாற்றியிருக்கும் சக்ஸஸ் ஃபுல்லான சீடர். ஒரே ஆண்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தொடர் வெற்றிகளை ருசித்தவர். ஃப்லிம் மேக்கிங்கில் காட்டிய தனது ரசனை மூலமாக நம்மையும் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருப்பவர். எனக்கு கிடைத்திருக்கும் வெற்றிகள், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் வெற்றிகள். தனிப்பட்ட சசிகுமாருக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்காதீர்கள் என்று வேண்டுகோள் வைப்பது சினிமா மீதான இவரது காதலைக் காட்டுகிறது.


5. தனுஷ்

இன்றைய தலைமுறை நடிகர்களில் உணர்வுகளை அழகாகக் காட்டும் மாப்பிள்ளை. ஒல்லி உடம்பும், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றமும் இவரது ப்ளஸ். தனது பலம், பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இவர் தன்னை முழுவதுமாக தனது இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார். இதனால் இவரது வெற்றி சதவீதம் இன்னும் உயரத்தில் இருக்கிறது. ரஜினியின் மருமகன் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது இவரது புத்திசாலிதனம். இவரைப் பார்க்க பார்க்கதான் ரொம்ப பிடிக்கும். இவரது சம்பளம் ஐந்து கோடிகள் வரை.


5. சிம்பு

புதிய தலைமுறையின் ஆல்-ரவுண்டர். சினிமாவின் அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஒரு ராக்கோழி. முதலில் கட்டம் கட்டுவதிலும், விரலை அசைப்பதிலும் ஆர்வம் காட்டியவர் இப்போது நல்ல ஸ்கிரிப்ட்களுக்காக நிதானம் காட்டுகிறார். காதல், சர்ச்சைகள் இவரது நல்லப் பையன் இமேஜிற்கு டேமேஜ்ஜாக இருப்பதை உணர்ந்துக் கொண்டதால் தற்போது எதையும் அடக்கி வாசிக்கிறார். இரண்டு வருடங்களாக சிங்கிளாக இருந்தபடி அடுத்தடுத்த ஸ்கிர்ப்ட்களில் மும்முரம் காட்டிவருகிறார். ’இன்றைக்குள்ள ரேஸில் லாஸ்ட்டில் யார் ஃப்ர்ஸ்ட் வர்றாங்க என்பதுதான் முக்கியம். அதுக்குதான் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறேன்’ என்கிற சிம்பு தனக்கு செட்டாகும் ஸ்கிரிப்ட்களை எழுதி, அதை இயக்கவும் கிளம்பியிருக்கிறார். இவரது சம்பளம் நான்கு கோடிகள் வரை.

6. துரை தயாநிதி அழகிரி

அண்ணன் உதய்நிதி காட்டிய வழியில் ஸ்மூத்தாக படமெடுக்கும் இளம் தயாரிப்பாளர். இவரது ’க்ளவ்ட் நைன் மூவிஸ்’ தயாரிப்பில் வெளிவந்த ‘ தமிழ்ப் படம்’ மற்ற படங்களில் இடம்பெற்ற காட்சிகளை நையாண்டி செய்யும் ‘ஸ்பூஃப்’ பாணியில் வெளிவந்த படம். வேறெந்த தயாரிப்பாளரும் எடுக்க தயங்குகிற ஸ்பூஃப் படத்தை தைரியமாக எடுத்தது இவரது இள ரத்தத்தின் சக்தியைக் காட்டுகிறது. இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பது இவரது வரவை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

7. கெளதம் வாசுதேவ் மேனன்


’நட்புக்காகவும், காதலுக்காகவும் உசுர கொடுப்போம்ல’ என்று மதுரைத் தமிழில் அருவாவைத் தூக்கிக் கொண்டு புழுதிப் பறக்கும் செம்மண்ணில் சண்டைப் போடுவதும், ஊர் திருவிழாவை பல ஆட்டங்களோடு கூட்டத்தோடு காட்டுவதும் மட்டுமே யதார்த்தம் இல்லை. நகர வாழ்க்கையிலும் ஆங்கில வாடை அடிக்கும் யதார்த்தம் இருக்கிறது. அதைக் காட்டுவதற்குதான் ஆசைப் படுகிறேன் என கிளம்பியிருப்பவர் கெளதம் வாசுதேவ் மேனன். நட்சத்திரங்களுக்கு ஃப்ரெஷ் லுக் கொடுப்பதோடு, கதைக்கும் மேற்கத்திய டச் கொடுப்பதால் இளசுகள் மத்தியில் கெளதம் மேனனுக்கு கிளாஸ் இமேஜ் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘செம்மொழி மாநாட்டின்’ பாடலை விஷூவலாக ஷீட் செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் இவரது மேக்கிங் ஸ்டைல்.


8. ஹாரிஸ் ஜெயராஜ்

வருஷத்திற்கு மூன்றுப் படங்களுக்கு இசையமைத்தாலும் ஆண்டு முழுக்க தனது ‘மாஹியாகா’ மாதிரியான புத்தம்புது தமிழ் ஹம்மிங்களையும், பாடல்களையும் முணுமுணுக்க செய்வது ஹாரிஸின் சக்ஸஸ். வந்த வாய்ப்புகளையெல்லாம் அள்ளிக் கொள்ளாலாமல், கதையைக் கேட்டு பிடித்தால் மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொள்கிறார். இதிலிருந்தே ஒரு படத்தின் ரிலீஸிற்கு முன்பே அதற்கு இருக்கும் சக்ஸஸ் சதவீதத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்று டல்லடிக்கும் ஆடியோ பிஸினெஸில்கூட இவரது இசை என்றால் அதற்கென ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.


9. தமன்னா

அஸின், நயன் தாரா, த்ரிஷா என இங்குள்ள கதாநாயகிகள் பல கமிட்மெண்ட்களால் பிஸியாக, ஒரு அழகான நாயகிக்கான வெற்றிடம் உருவாக அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தமன்னா. இவரது முதல் இரண்டுப் படங்கள் தோல்வியடைந்தாலும், சொல்லிவைத்தாற் போல் அடுத்தடுத்தப் படங்கள் ஹிட். இதனால் இன்று வரை தமன்னா காட்டில் அடடா மழைடா.. அடை மழைடா.. என முணுமுணுக்க வைத்திருக்கிறது. தமன்னாவின் சம்பளம் தற்போது எழுபது லட்சங்கள் என்கிறார்கள். இவரது முகம் இன்னும் போரடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் வரை பிடிக்கலாம். அதுவரை தமன்னா ‘குட்’ங்கணா.


10. சீமான்

இயக்குநராக அறியப் பட்டாலும், தமிழ் மீதான இவரது மனம் இவரை தற்போது ஒரு இயக்கவாதியாக முன்னிறுத்தியிருக்கிறது. மாதவன் நடித்த ‘தம்பி’ இவரது எண்ணங்களை வெளிப்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராகவோ, தமிழ் மீது கறைப் படியும் நடந்தாலோ குரல் கொடுக்கவும் இவர் தவறுவது இல்லை. இதனால் இவரது குரல் தற்போது தமிழ் சினிமாவில் எதிரொலிக்கிறது.

கார்த்தி பேட்டி

”நான் நடிக்க வந்தப்ப சிவகுமார் பையன், சூர்யா தம்பின்னுதான் சொன்னாங்க. அது எனக்கு பெருமைதான். ஆனால் ஒரு நடிகனா நான் தனிச்சு நிற்கணும். மூணுப் படங்கள் பண்ணிட்டேன். இப்ப சூர்யா தம்பியாக என்னைப் பார்க்கல. கார்த்தின்னு ஒரு நடிகனாக ஏத்துகிட்டாங்க. உங்க படம் பார்த்தேன். நல்லா இருக்கு. நீங்க இந்த மாதிரி நடிக்கலாமேன்னு அவங்க வீட்டு பையன் மாதிரியே அன்பாக சொல்றாங்க. இதை எனக்கு கிடைச்ச சின்ன வெற்றியாக பார்க்கிறதை விட எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பாகதான் பார்க்குறேன். அதைக் காப்பாத்துறக்கு உழைப்பேன். நிச்சயம் நல்லப் படங்களை பண்ணுவேன்” என்று ஆரம்பிக்கிறார் கார்த்தி.

நீங்க இயக்குநராகணும்தானே வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சீங்க. மணி ரத்னம்கிட்டேயும் அஸிஸ்டெண்டாக வேலைப் பார்த்தீங்க. அப்புறம் ஏன் இந்த நடிகர் அவதாரம். கொஞ்சம் குழப்பம் இருக்கோ உங்களுக்கு?

“நிச்சயமாக இல்ல. எனக்கு பிடிச்சது சினிமா. அதுலதான் வேலைப் பார்க்கணுங்கிறது என்னோட கனவு. நான் ஒரு கிராஃபிக் டிஸைனர். எனக்கு சினிமாவை விஷூவலாகதான் நல்ல யோசிக்க தோணும். அதனால் என்னோட விஷூவல் சென்ஸை வைச்சு இயக்குநராகணும் ஆசைப்பட்டேன். ஆனால் இயக்குநருக்கு ஸ்டோரி சென்ஸ் அதிகம் இருக்கணும். அதுக்கு நிறைய கதைகளை, விஷயங்களைப் படிக்கணும். இதை யோசிச்ச போதுதான் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. இது எனக்கு சரியாக செட்டாயிடுச்சு. நல்லா போகுது. அப்புறம் எதுக்கு குழப்பம். என்னோட அண்ணனை மாதிரி நானும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயார் பண்ணிட்டே இருக்கேன். வீட்டிலேயே ஒரு ரோல் மாடல் இருக்கும் போது கவலை எதுக்கு? ஆனால் ஒரு நாள் இயக்குநராவேன். அப்ப நான் இயக்குகிற படம் நிச்சயம் என்னை ஒரு நல்ல இயக்குநராக அடையாளம் காட்டும்.”

உங்க அண்ணன் சூர்யாவை மாதிரியே இருக்கீங்களே. அவரோட சாயல் வேறு கொஞ்சம் இருக்கு. அதனால் நீங்க என்ன பண்ணினாலும் அது சூர்யா பண்ற மாதிரியே இருக்குன்னு கொஞ்ச நாள்ல கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்களே

”நீங்கதான் இப்படி சொல்றீங்க. எங்க அப்பா என்னை ஸ்கிரீன்ல பார்த்துட்டு சொன்ன முதல் கமெண்டே ‘என்னடா உனக்கும் சூர்யாவுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிற. நல்ல விஷயம்பா. ஒரு நடிகனுக்கு யாருடைய சாயலும் இருக்கக்கூடாது’ன்னு சொன்னாங்க. அண்ணன் தம்பிங்கிறதால ஒரு சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தெரியலாம். இந்த ஜெனட்டிக் விஷயங்கள் இருந்தாலும் அவரோட உடல்வாகு வேற, என்னோட உடல்வாகு வேற. மேனரிஸம் வேற. அண்ணனை மாதிரியே நான் இருந்தால் எனக்கு வேலையே இல்லையே.”

திரும்ப திரும்ப ரஜினி கமலை இழுக்க வேண்டாம். அதனால் அஜீத்- விஜய் இந்த இரட்டை கமர்ஷியல் கில்லாடிகளின் ரூட்டில் எது உங்க சாய்ஸ்?

”நான் ரஜினி சார், கமல் சார் படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். அவங்களை மாதிரி எத்தனை வருஷமானாலும் தாக்குப்பிடிச்சு ஜெயிக்கணுங்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கும். என்னைப் பொற்த்தவரை வீட்டிலேயே அண்ணன் மெனக்கெடுகிற உழைப்பைப் பார்த்து மிரண்டு போயிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துகிட்டு இன்னைக்கு இந்த உயரத்தைத் தொட்டிருக்கார். பக்கத்திலிருந்தே பார்த்ததால அவரோட அந்த உழைப்பையும் அதுக்கு கிடைச்ச வெற்றியும் பெருமையாக நினைக்குறேன்.”

எல்லோருமே ப்ளஸ், மைனஸ்ஸூடன் தான் கேரியரை ஆரம்பிக்க முடியும். அப்படி நீங்க ஒரு ஹீரோவாக உங்களை தயார்படுத்திக்க சரி பண்ணின மைனஸ் விஷயங்கள் என்னென்ன?

”டான்ஸ், சண்டையில நான் கில்லாடி கிடையாது. ஆனால் இப்ப சண்டைக் காட்சிகள்ல நல்லா பண்ண ஆரம்பிச்சிருக்கேன். பையாவுல கூட லேசான டான்ஸ் மூவ்மெண்ட்தான் இருந்துச்சு. இப்ப டான்ஸிலும் அக்கறை எடுத்து பண்றேன். ’நான் மகான் அல்ல’ படத்துல என் டான்ஸை பார்த்துட்டு சொல்லுங்க. ஒரு நடிகனுக்கு பாடி லாங்க்வேஜ் ரொம்ப முக்கியம். உடம்பை கொஞ்சம் முறுக்காம காட்சிக்கேத்த மாதிரி நடிக்கிறதுல மட்டும் இன்னும் கவனம் செலுத்துறேன். ஆனால் ஒரே விஷயத்துல மட்டும் என்னால அண்ணனோடு போட்டி போட முடியாது. எட்டு மாசமா ஆசைப்பட்டதை சாப்பிடாம, வொர்க் அவுட் வொர்க் அவுட்னு உழைச்சு விறைப்பாக ஏத்தி வைச்சிருக்காரே அந்த சிக்ஸ் பேக் அது மட்டும் என்னால் முடியவே முடியாது. இப்பவே வெயிட்டை குறைன்னு எங்க வீட்டுல ஒரெ அட்வைஸாக இருக்கு.” கலகலவென சிரிக்கிறார் கார்த்தி.

இயக்குநர் ஷங்கர் பேட்டி.


ஒரு மாலைப் பொழுதில் இயக்குநர் ஷங்கரைச் சந்த்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்போது பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாட முடிந்தது. ஷங்கரும் மனம்விட்டு பல விஷயங்களைப்பற்றி பேசினார். அந்த உரையாடலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே இடம்பெறுகிறது.

எந்திரனைப் பொறுத்தவரை கமல்தானே உங்களின் முதல் சாய்ஸ், தற்போது சூழ்நிலைகளால் ரஜினி நடிக்கிறார். இந்த இரு ஜாம்பவான்களில் யார் மிகப் பொருத்தமென்று நினைக்கிறீர்கள்?


”‘ஜென்டில் மேன்’ படத்தை முதலில் சரத் குமாரை வைத்து எடுப்பதாகதான் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அர்ஜூன் நடித்தார். இதனால் ஸ்கிரிப்டை, வசனங்களை அர்ஜூனுக்கேற்ற மாதிரி மாற்றிய பிறகே ஷூட் செய்தேன். கதையை எழுதிவிட்டு, காஸ்ட்டிங் விஷயங்களை முடித்துவிட்டு ஷூட்டிங் போகும் போது காட்சிகள். வசனங்களை எழுதுகிற போது யார் ஆர்டிஸ்ட்டோ அவர்களுக்கான ஃப்ளேவர் உடன் எழுதும் போதுதான் நன்றாக இருக்கும். எந்திரனை கமல் சாருக்காக தயார் பண்ணினாலும், ரஜினி சார்தான் என்று முடிவானதும், அவருக்கேற்றபடி ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றி எடுத்திருக்கிறேன். இதனால் எந்திரனுக்கு ரஜினி சார்தான் சரியான பொருத்தம் என்று சொல்வீர்கள். இக்கதையை கமல் சாருடன் பேசி வைத்திருந்தோம். அதற்கு பிறகு முழுமையாக எழுதவில்லை. இதனால் நான் கமல் சாரை வைத்து இப்போது யோசிக்க முடியவில்லை.”
ருக்கும்.”

சுஜாதா என்றொரு மாபெரும் சக்தி இதுவரை உங்களுக்கு பலவிதங்களில் துணையாக இருந்திருக்கிறார். இன்று அவர் நம்மோடு இல்லை. அவரது மறைவு தந்திருக்கும் வெற்றிடம் உங்களை எந்தளவிற்கு பாதித்திருக்கிறது?


”சுஜாதா சார் இன்று இருந்திருந்தால் எந்திரனைப் பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆளாக இருந்திருப்பார். .......ஆனால் என்ன பண்ணுவது..... அவர் இல்லாத குறையை தெரியாதபடி எடுத்திருக்கிறேன். படத்தின் மீதி வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கார்க்கியும் டெக்னிக்கலான விஷயங்களைப் பற்றி வரும் வசனங்களை எழுதியிருக்கிறார். இரண்டுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். சுஜாதா சார் இருந்தால் படத்தின் ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் அவரோடு விவாதிப்பேன். டபுள் பாஸிட்டிவ் எடுத்ததும் அவருக்கு போடு காண்பிப்பேன். எல்லா ஸ்டேஜ்களிலும் இருந்த டிஸ்கஷன்கள் அவருடைய மறைவுக்கு பிறகு இல்லை. இப்போது அதற்கு நான் ட்யூன் ஆகிவிட்டேன். வேறு என்ன பண்ணமுடியும்.”

உங்களது நீண்ட கால கனவாக சொல்லும் ‘அழகிய குயில்’ கதை தற்போது இயக்கினால் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறீர்களா?

”அழகிய குயில் மீதான அந்த ஆசை இன்றும் எனக்குள் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அக்கதையை அப்படியே எடுக்க முடியாது. சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. வெறு வடிவமும் அவசியமாகியிருக்கிறது. ஏனென்றால் நான் இதுவரை இயக்கியப் படங்கள் மக்களுக்கு ஒரு சுவையைக் காட்டியிருக்கின்றன. அதனால் நான் பண்ணுகிற முயற்சி தற்போது நான் கொடுத்திருக்கும் சுவைக்கு எந்தவிதத்திலும் குறையாத வேறொரு சுவையாக இருக்க வேண்டும். இப்படி யோசிக்கும் போது, அழகிய குயிலில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் முதலில் யோசித்து வைத்ததைப் போல பலர் பண்ணிவிட்டார்கள்.”

’வாட் நெக்ஸ்ட்...வாட் நெக்ஸ்ட்..’ என்று அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போகும் உங்கள் தன்னம்பிக்கைக்கு என்ன காரணம்?

”சின்ஸியாரிட்டி, ஹோம் வொர்க் இந்த இரண்டு விஷயங்கள்தான். எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு பரீட்சை. அதனால் பரீட்சைக்கு இதைப் படித்தால் மட்டும் போதும். பாஸாகிவிடலாம் என்று கடமைக்காக நான் எதையும் செய்வதில்லை. பரீட்சை என்றால் வெறும் பரீட்சை தாள்களை மட்டும் படித்துக் கொண்டு போகிறா ஆளில்லை. எனக்கு முதல் பக்க அட்டையிலிருந்து, பின் பக்க அட்டைவரை முழுவதுமாக படிக்க வேண்டும். இப்படி எதிலும் பக்காவாக தயாராகி போவதுதான் என் பழக்கம். அதேபோல் பரீட்சைக்கு முன்னால் மொத்தமாக சேர்த்து வைத்து படிக்கிற பழக்கமும் இல்லை. அடுத்த ஜூலையில் பரீட்சை என்றால் இந்த ஜூலையிலிருந்தே முதல் நாளிலிலிருந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். சும்மாவாக இருக்கவே மாட்டேன். தினமும் வொர்க் பண்ணிக் கொண்டே இருப்பேன். இதனால்தான் என்னால் பக்காவாக என் வேலையை செய்து முடித்து பாஸாக முடிகிறது.”

உங்களது ‘எஸ் பிக்சர்ஸின்’ தயாரிப்பு தொடருமா?
”ஆரம்பத்தில் எனக்கு லாபம் கிடைத்தது உண்மை. சமீபத்தியப் படங்கள் அந்த லாபத்தைக் கொடுக்கவில்லை. எந்திரன் படம் வெளிவரும் வரை தயாரிப்பு விஷயங்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகே நான் தனிமையில் அமர்ந்து, இனி என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம் என்று யோசிக்க வேண்டும்.”

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் கூட இன்று ஓபனிங் இல்லாமல் தோல்வியடைகிறதே., ஏன்?


”நான் அந்த ஆராய்ச்சிகளுக்கெல்லாம் போவது இல்லை. நம்முடைய வேலையை ஒழுங்காக செய்கிறோமா? அது எந்தவிதத்திலும் விழுந்துவிடக் கூடாது. ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் எப்போதும் இருக்கும். ”

ஜெண்டில் மேன், இந்தியன், சிவாஜி, அந்நியன் என ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளங்களில் யோசிக்கிறீர்களே. இந்த கதைகளுக்கான கரு எப்படி உருவாகிறது. அதற்கான விதையை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

”நம் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், பார்த்தது, படித்தது, எங்கேயாவது கேள்விப் பட்டது அல்லது இதெல்லாம் சேர்ந்த ஒரு அனுபவமாக இருக்கும் விஷயங்களைதான் கதைக்குள் கொண்டு வருகிறேன். பொதுவாக நாலைந்து விஷயங்கள் மனதிற்குள் வட்டமடித்தபடியே இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் எந்த விதை பெரிதாக வருகிறதோ அதையே கருவாக எடுத்துக் கொண்டு கதை எழுத ஆரம்பிப்பது என் வழக்கம்”.

கதையை தனியொரு ஆளாகதான் எழுத ஆரம்பிக்கிறீர்களா?

”இதற்கு முன்பு நான் இயக்கிய படங்களிலிருந்து வேறுபட்டு தனித்து இருக்கும் ஒரு விதைதான் நிச்சயம் மக்களிடம் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். பல விஷயங்கள் நம் மூளைக்குள் அனிச்சையாக இருக்கின்றன. ஏதாவது ஒரு பொறி தட்டும் போது, இதே போல் ஏதேனும் கதைகள் ஏற்கனவே வந்திருக்கிறதா, இன்றைக்குள்ள ஆடியன்ஸூக்கு சரியாக இருக்குமா என நம் மூளைக்குள் ஒரு ஸ்கேனிங் வேலை தானாகவே முடிந்துவிடுகிறது. ஓ.கே. இந்தப் பொறி இதுவரை வராதது, புதியது, தைரியமாக எடுக்கலாம் என்று நம் மூளை ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடுத்த பிறகே அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும்.”

இப்போது இவ்வளவு உயரத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ஷங்கர், ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநர் ஷங்கராக இருப்பாரேயானால் அவர் மீதான உங்கள் அபிப்பிராயம் இருக்கும். எந்தவிதமான போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறீர்கள்? 
”நான் அப்படியெல்லாம் யோசித்தது இல்லை. இது கஷ்டமான கேள்வியாக இருக்கிறதே. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இதே போல் தான் இருந்திருப்பேன். நான் எடுத்துக் கொண்டதில் என்னால் முடிந்தளவிற்கு போராடி ஜெயித்திருப்பேன். உங்களுக்காகவே நான் இதுபற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எந்த பாதையில் போயிருந்தாலும் அதில் சாதித்துவிடக்கூடியவர் என்று என்னோடு வேலைப் பார்ப்பவர்கள் சொல்வார்கள். இதை வைத்துதான் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற படங்களை எடுத்திருந்தாலும், அதில் வெற்றிகளைக் கொடுத்து நிச்சயம் நல்ல நிலையில்தான் இருந்திருப்பேன்.”
































Thursday, September 2, 2010

îI› CQñ£M¡ ý£† 10 ﮬèèœ ð†®ò™. 

1. ïò¡î£ó£

’ò£ó® c «ñ£AQJ™’ ²K ÜE‰¶ õ‰î ªê£˜‚èñ£è Þ¼‰î£½‹, Üpˆ¶ì¡ ‘H™ô£’ ðìˆF™ HAQJ™ õ‰î¶ Þõó¶ A÷£ñ˜ Üõî£óˆF¡ à„ê‚è†ì‹. êó£êK àòóˆF™ Þ¼‰î£½‹ ªõœOˆF¬óJ™ Üêˆîô£ù ð£®ô£ƒ«õT™ ý£†ì£è «î£¡Áõ¶ ïò¡î£ó£M¡ ðô‹. Üö¬è óC‚°‹ð® ¬èò£œõ¶ âŠð® â¡ø Mˆ¬î ÞõKì‹ Þ¼‚Aø¶. Hó¹ «îõ£ àìù£ù ªï¼ƒAò  Þõ¬ó ޡ‹ ý£† «è‚ Ý‚AJ¼‚Aø¶.

2. ÜÂwè£

Ýø®J™, õ£†ì꣆ìñ£è Þ¼‚°‹ A÷£ñ˜ «îõ¬î. «ò£è£ ðJŸCè÷£™ àì¬ô 膴‚«è£Šð£è ¬õˆF¼‚Aø£˜. ‘ܼ‰îb’ ðìˆF™ ªðKò °ƒ°ñŠ ªð£†´‹, ð†´Š¹ì¬õJ™ õ‰î£½‹, ’Cƒè‹’ ðìˆF™ ý£† à¬ìèO™ Ý†ì‹ «ð£†´ õò¶ MˆFò£êI™ô£ñ™ ♫ô£¼¬ìò è‡èÀ‚°‹ àŸê£è ͆®òõ˜. C‹¹¾ì¡ ﮈ¶ ªõOõóM¼‚°‹ ‘õ£ù‹’ ðìˆF™ Þ÷²è¬÷ Þ‹¬ê„ ªêŒ»‹ A÷£ñK™ ÞøƒAJ¼‚Aø£˜.


3. v«óò£

ð£ÂŠKò£, C‹ó‚°Š Hø° I辋 Ýðˆî£ù õ¬÷¾è¬÷ à¬ìò Þ¬ìòöA. èî‚ ïìùˆFù£™ C‚ªè¡Á Þ¼‚Aø£˜. A÷£ñ˜ MûòˆF™ î£ó£÷ñ£‚è™ ªè£œ¬è¬ò‚ è¬ìŠH®Šð ‘è‰îê£IJ™’ ð†ªü† à¬ì èõ˜„CJ™ ÜFó ¬õˆîõ˜. ݃Aô Þî›èœ CôõŸP¡ «ð£†«ì£ ªêû‚° Þõ˜ ªè£´ˆî «ð£vèœ Þ¡ì˜ªï†®™ ޡ‹ ²ì„²ì 쾡 «ô£† ªêŒòŠð´A¡øù.

4. ˆKû£

Iv. ªê¡¬ùò£è Agì‹ Å†®òFL¼‰«î ñ£ì˜¡ ñƒ¬èò£è M÷‹ðóƒèO™ «î£¡Pòõ˜. Þîù£™ CQñ£M™ Þõ¼‚° â‰î à¬ì»‹ î¬ì Þ™¬ô. «ô†ìv†ì£è å¼ ÝƒAô ÞîN¡ ܆¬ìŠ ðìˆFŸè£è ªè£´ˆî «ð£v, èõ˜„CJ¡ ‚÷£v. Ü«î«ïó‹ îI› ðˆFK‚¬èèO™ ñ†´‹ ÜŠð®ð†ì ÜFó® «ð£vè¬÷ ªè£´‚è£ñ™ ê£IJ¡ ñ£Iò£è ñ†´«ñ ð£óð†ê‹ 裆´õ£˜.


5. ÜR¡

«ý£‹L»‹ ªê†ì£°‹. ñ£ì˜Â‹ ªê†ì£°‹. Üîù£™ ÜR¡ å¼ êKò£ù èô¬õò£è Aøƒè®‚Aø£˜. U‰FJ™ ªè£…ê‹ ÜFè èõ˜„C «î¬õŠð´õ îù¶ A÷£ñ˜ ð£LRJ™ Cô è£v†Î‹ ªêô‚û¡è¬÷ «ê˜ˆF¼‚Aø£˜.

6. îñ¡ù£

ïò¡î£ó£, ÜR¡, ˆKû£ ªè£´ˆî Þ¬ìªõOJ™ ¬êô‡†ì£è ⇆g ªè£´ˆî ªõ£J† ŠÎ†®. êeðè£ôñ£è º¡ùE ï£òè˜èÀì¡ ï®Šð ðóõô£è ♫ô£¼¬ìò ñù¬î»‹ ªè£…ê‹ °ˆî¬è‚° â´ˆF¼‚Aø£˜. Ü´ˆî´ˆ¶ U† «ó† âAø, Þõó¶ A÷£ñ˜ «ó…²‹ âAPJ¼‚Aø¶. ªõ£J† õ£w Ü®ˆî¶ «ð£™ ªõœ¬÷ò£è Þ¼Šð¶ Þõó¶ Š÷v ܇† ¬ñùv. Üîù£™ ܬî êñ£O‚°‹ Mîñ£è îù‚° è„Cîñ£è ªð£¼‰¶‹ A÷£ñ˜ à¬ìèO™ Ý†ì‹ «ð£†´ ªê†®ô£A Þ¼‚Aø£˜.


7. ïeî£

ð¶ õò¶ ñ„꣡èO¡ Hó‹ñ£‡ìñ£ù ý£† ç«ðõK†.. ‘ܘ„²ù£.. ܘ„²ù£..’ â¡Á ܼMJ™ ï¬ù‰îð® Þõ˜ Ý®ò ݆ì‹î£¡ Þõó¶ èõ˜„C ºèõK. è…êîùI™ô£î èõ˜„C â¡ø Þõó¶ ܵ°º¬øJ™ M¿‰î M‚ªè†´èœ ãó£÷‹. ð£ì™èO™ â™ô£«ñ î£ó£÷‹. Fè†ì Fè†ì 裆´‹ èõ˜„C Þõ¼‚° ªè£…ê‹ ¬ñùú£è Þ¼‚Aø¶ â¡ø 輈¶‹ Þ¼‚Aø¶.


8. w¼F ý£ú¡

èñ™ ܊𣾂° Hø‰î ñ蜠 âŠð® ý£†ì£è Þ™ô£ñ™ Þ¼‚è º®»‹. Þ¡¬øò Þ÷²èO¡ ç«ðû¡ †ªó‡¬ì HóFðL‚°‹ «èû¨õ™ ŠÎ†® Þõ˜. ‘ãö£‹ ÜP¾’ ðìˆF¡ Íô‹ ÞŠ«ð£¶î£¡ è÷ˆF™ °FˆF¼‰î£½‹, Þõó¶ U‰FŠ ðìñ£ù ‘ô‚A’J™ Þõ˜ ÞøƒAò HAQ 裆C Þõó¶ Åì£ù MC†®ƒ 裘†.. ªñ™L¬ìò£è Þ¼‚°‹ Þõó¶ õó¾ âF˜ð£˜ŠHŸ° àœ÷£AJ¼‚Aø¶.

9. ý¡Rè£ «ñ£ˆõ£Q

«è£¶¬ñŠ Hó«îêˆFL¼‰¶ õ‰F¼‚°‹ IQ«ò„ê˜ °w¹. î÷î÷ªõù Þ¼‚°‹ Þõ˜ G„êò‹ Þ¡¬øò îñ¡ù£ õ¬èòø£‚èÀ‚° å¼ êõ£™. Mü»ìù£ù ‘«õô£»î‹’, Hó¹«îõ£M¡ ‘Þ„’, îÂû¨ìù£ù ‘ñ£ŠHœ¬÷’ âù å¼ ªðKò 󾇮Ÿ° îò£ó£è Þ¼Šð ý¡Rè£M¡ èîèîŠð£ù ﮊ¬ðŠ 𣘂è îò£ó£è Þ¼ƒèœ.

10. ªüQLò£

ªð¼‹ð£ô£ù ðìƒèO™ Ö² ªð‡í£è«õ ﮊð¶ Þõ¬ó ý£† Lv†®™ Þ¼‰¶ ªè£…ê‹ îœO ¬õˆF¼‚Aø¶. °ö‰¬îˆîù‹ ªè£…²‹ Þõó¶ ºè‹ î£¡ Þõó¶ ܬìò£÷‹. U‰FJ™ ªè£…ê‹ èõ˜„C 裆´‹ ªüQLò£ Ü«î φ®™ Þƒ«è ðòEˆî£™ Þƒ°œ÷ Þ÷²è¬÷ õ¬÷ˆ¶Š «ð£ìô£‹.
 .